India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மாணவர்களின் உயர்கல்விக்கு எதுவும் தடையாக இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தை ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர், பள்ளிக்கல்வி முடித்த அனைவரும் கட்டாயம் உயர்கல்வி பயிலும்படி வலியுறுத்தினார். மேலும், தமிழக மாணவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை விட தாம் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார்.
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ₹1,000 வழங்கினார். இதனைத்தொடர்ந்து, அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, வங்கிக் கணக்கில் பணம் வரவில்லை என்று மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், இன்றைக்குள் வந்துவிடும். இல்லையென்றால், உங்களின் வங்கிக் கணக்கை சரிபார்க்க வேண்டும்.
செல்போன் அழைப்பு மூலம் மோசடி அதிகரித்து வருகிறது. இதிலிருந்து தப்ப சைபர் குற்றப்பிரிவு போலீஸ் ஆலோசனை வழங்கியுள்ளது. அதில், அழைப்பு மேற்கொண்டது மோசடி நபர் என சந்தேகம் எழுந்தால், https://cybersafe.gov.in/ இணையதளத்தில் எண்ணை உள்ளிட்டு பரிசோதிக்கலாம். பிறகு https://sancharsaathi.gov.in/sfc/Home/sfc-complaint.jsp இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9ஆக குறைக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆகும். இதை 9ஆக குறைக்க தனிநபர் சட்டத்தில் திருத்தம் செய்ய ஈராக்கின் சட்ட அமைச்சகம் மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால், ஈராக்கில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் பாதிக்கப்படுமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘அமரன்’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டதை நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டா ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இதில் அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகக் நடித்துள்ளார். ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், அக்.31ஆம் தேதி வெளியாக உள்ளது. ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்க, கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
அரசுப் பள்ளியில் 6-12ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, சுமார் 3.28 லட்சம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ₹1000 செலுத்தப்பட்டுள்ளது. பொருளாதார வசதி குறைவால், உயர்கல்வி தொடர முடியாதவர்களுக்கு இத்திட்டம் உதவிகரமாக இருக்கும். இதனால், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரசு கூறியுள்ளது.
24 காவல் அதிகாரிகளுக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.மணிகண்டன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். தாம்பரம் பள்ளிக்கரணை துணை ஆணையராக கார்த்திகேயன், சென்னை தியாகராயர் நகர் துணை ஆணையராக குத்தாலிங்கம், புளியந்தோப்பு துணை ஆணையராக முத்துக்குமார், நெல்லை ( கிழக்கு) மாநகர துணை ஆணையராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாய் நாட்டிற்காக பதக்கம் வெல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். நேற்று பாக்., வீரர் அர்ஷத் நதீமிற்கான நாள் என்றும், அவர் தான் தன்னைவிட சிறப்பாக செயல்பட்டதாகவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், தற்போது நமது தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்றாலும், வருங்காலத்தில் உறுதியாக இசைக்கப்படும் என முழு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஹரியானா பள்ளிகளில் மாணவர்கள், குட்மார்னிங்கிற்கு பதில் ஜெய் ஹிந்த் என்று சொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தேச பற்று, நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில், ஆக. 15 (சுதந்திர தினம்) முதல் “குட்மார்னிங்கிற்கு” பதில் “ஜெய் ஹிந்த்” என்று சொல்ல மாணவர்களை அறிவுறுத்த வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, சிபிஐ வழக்கு பதிந்து அவரை கைது செய்தன. இதில் ஜாமின்கோரி சிசோடியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 17 மாதங்கள் ஆகியும் விசாரணை தொடங்காததால் சிசோடியா பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவருக்கு ஜாமின் அளித்து உத்தரவிட்டனர்.
Sorry, no posts matched your criteria.