India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருமான வரிச் சட்டம் 1961ன் படி, லாட்டரி உள்ளிட்டவற்றில் வென்றாலும் அந்த பரிசுத்தொகைக்கு அரசுக்கு வரி செலுத்த வேண்டும். அவருக்கு பணம் செலுத்தும் முன்பே TDS கழிக்கப்படும். ₹10,000க்கு மேலான பரிசுத்தொகைக்கு 30% TDS கழிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம், செஸ் வரியைச் சேர்த்தால் இத்தொகையில் 31.2% வரை வேறுபாடு இருக்கக் கூடும். பரிசுத்தொகை பெறும் ஒருவர் அதைப் பெற்ற பின் அதற்கான வரியை செலுத்த வேண்டும்.
ஆனந்த் அம்பானியின் திருமண வைபவத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க செய்துவிட்டார் தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு போன்ற தகவல்கள் டிரெண்டாகி வருகின்றன. அந்த வகையில், பார்க்லேஸ் – ஹாருன் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 10 சதவீதம், அதாவது ரூ.25.75 லட்சம் கோடி அம்பானி குடும்பத்திடம் தான் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘விடா முயற்சி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஆரவ்வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கனவுகள் மெய்ப்பட்டதற்கு அஜித்குமார், மகிழ் திருமேனிக்கு ஆரவ் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர்கள் அஜித்குமார் மற்றும் அர்ஜூன் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் சமீப காலமாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்படுவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் புனேவை சேர்ந்த முக்கிய ஐஎஸ் தீவிரவாதியான ரிஸ்வான் அப்துல் என்பவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் இன்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவரை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு NIA ரூ.3 லட்சம் பரிசுத் தொகை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வேலை தேடுவோருக்கு சைபர் க்ரைம் போலீஸ் அறிவுரை வழங்கியுள்ளது. வெளிநாடு வேலை என தொடர்பு கொள்ளும் ஏஜென்சிகள் நம்பகமானதுதானா? என்பதை https://emigrate.gov.in/#/emigrate/emigrant/list-of-ra-consolidate-report லிங்கில் உறுதி செய்ய கேட்டுள்ளது. போலி ஏஜென்சிகளை <-1>>https://emigrate.gov.in/#/emigrate/recruiting-agent/list-of-unregistered-ra-agencies-oragents<<>>இல் கண்டறியலாம் எனவும் கூறியுள்ளது.
விஜய்யை கண்டு திமுகவுக்கு அச்சமில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். விஜய் கட்சியின் மாநாட்டை திருச்சியில் நடத்த அமைச்சர் கே.என். நேரு இடையூறு செய்வதாகக் கூறப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதை தடுக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதாவை கண்டு பயப்படாத திமுக, விஜய்யை கண்டு பயப்பட போகிறதா என கேள்வியெழுப்பினார்.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் சத்யபால் (40), காயத்ரி தேவி (35). சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், காயத்ரி தனது கணவனை இன்று செங்கலால் தலையில் அடித்துக் கொன்றார். பின்னர் போலீஸ் கண் முன்பே, கணவனின் மார்பு மீது ஏறி, தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த பயங்கர <
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் அஷ்ரத் நதீம், இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து உத்வேகம் பெற்று இறுதியில் அவரையே வீழ்த்தியுள்ளார். காயமடைந்து ஓய்வில் இருக்கும் போது கூட நீரஜ், ஈட்டி எறிதலில் உள்ள டெக்னிக் பற்றிய வீடியோக்களை அவர் பார்த்ததாக நதீமின் உறவினர் அஷ்ரப் தெரிவித்துள்ளார். தீவிர பயிற்சியினால் நதீம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக மீனவர்களை கைது செய்து, தொடர் அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படைக்கு, இந்தியா எப்போது பாடம் புகட்டும் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தமிழ்நாடு மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், அதிகளவில் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 50 நாட்களில் மட்டும் 109 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது என்றார்.
கர்நாடகாவின் மங்களூருவில் இருந்து புறப்படும் ‘நவ்யுக்’ விரைவு ரயிலானது, 13 மாநிலங்களில் பயணித்து ஜம்மு தாவி சென்றடைகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என 13 மாநிலங்களின் வழியே தொடர்ந்து 4 நாள்கள் பயணிக்கும் இந்த ரயில், ஹிமாச்சல் பிரதேசத்தில் மட்டும் நிற்காமல் செல்கிறது. 13 மாநிலங்களை கடக்க 68 மணி 20 நிமிடங்கள் எடுத்து கொள்கிறது. நீண்ட தூர பயணங்களுக்கு இந்த ரயில் முக்கிய தேர்வாக இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.