India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2024 ஃபோர்ப்ஸ் அறிக்கை படி, அமெரிக்காவில் கடந்தாண்டில் 735ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 813ஆக அதிகரித்துள்ளது. 3ஆம் இடத்திலுள்ள இந்தியாவில், கடந்தாண்டு 169 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 200ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 116 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முன்னிலையில் உள்ளார்.
உயர்க்கல்வி சேரும் மாணவர்களுக்கு மாதம் ₹1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்காக https://umis.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கென தனிப்பட்ட எண் உருவாக்கப்பட்டு, அவர்களது செல்போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக அனுப்பப்படும்.
இதைத்தாெடர்ந்து, மாணவரின் ஆதார் எண், பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை (EMIS) தரவுகள் அமைப்பு, பல்கலைக்கழக தகவல் மேலாண்மை அமைப்பு தரவுகள் உள்ளிட்டவை மூலம் விண்ணப்பம் ஒற்றைச்சாளர முறையில் சரிபார்க்கப்படும். பிறகு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களுக்கும் சமூக நலத்துறையால் National Automated Clearing House மூலமாக ₹1,000 உதவித்தொகை மாணவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
மாணவர் தனது விண்ணப்பத்தை பதிவு செய்யும் போதும், மாணவரின் வங்கிக் கணக்கில் மாதம் ₹1,000 வரவு வைக்கப்படும் போதும் அவரின் மொபைல் எண்ணுக்கு உடனடியாக எஸ்எம்எஸ் வரும். இத்திட்டத்தில் கலை, அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (3 ஆண்டு) போன்ற உயர்கல்வி பெறும் மாணவர்கள் பயன் பெறலாம்.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “தமிழ்நாட்டின் எதிர்காலமான மாணவர்களுக்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறேன். அப்படி, ஒரு தந்தையாக இருந்து நான் உருவாக்கிய திட்டம்தான் தமிழ்ப்புதல்வன் திட்டம். அரசுப்பள்ளியில் படித்து உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” எனக் கூறினார்.
ரோஹித், கோலி போன்ற சீனியர்களிடம், அனைத்து போட்டியிலும் ஆட வேண்டும் என கம்பீர் கண்டிப்பு காட்டியதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். ரவி சாஸ்திரி, டிராவிட் போன்றவர்கள் முக்கியமற்ற தொடர்களில் சீனியர்களுக்கு ஓய்வு வழங்குவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், SL-க்கு எதிரான தொடரானது, சாம்பியன்ஸ் டிராஃபிக்கான தேர்வில் ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்த போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
நிலச்சரிவால் பேரழிவை சந்தித்த வயநாட்டில் நிவாரணப் பணிக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த ஏராளமான அரசியல்வாதிகளும், திரைபிரபலங்களும் நிதியுதவி அறிவித்து வருகின்றனர். ஆனால் முன்னணி நடிகரான ரஜினி இதுவரை எந்த உதவியையும் அறிவிக்கவில்லை. அவர் சார்பில் உதவி வழங்கப்பட்டதாகத் தகவலும் இல்லை. இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட குறிச்சியார்மலை, மூரிக்காப்பு, அம்புகுத்திமலை போன்ற பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவு பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில், இந்த நில நடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால், மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயக்குநர் சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆக. 12ஆம் தேதி ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நடித்துள்ள முன்னணி கதாபாத்திரங்கள் டீசரில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. டீசருக்கான தணிக்கை சான்றிதழை படக்குழு சமீபத்தில்தான் பெற்றது. ஒரே தயாரிப்பாளர் என்பதால், 15ஆம் தேதி வெளியாக உள்ள ‘தங்கலான்’ ட்ரெய்லருடன் இணைந்து இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இன்று மற்றும் ஆக. 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை மாவட்டங்களிலும், ஆக. 11ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.