India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவின் மூணாறு அருகேயுள்ள கேப் ரோடு பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மண் சரிவைத்தொடர்ந்து, பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பாறைகள் விழுந்தபோது, வாகனங்கள் எதுவும் சாலையில் செல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வயநாட்டை தொடர்ந்து மூணாறிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக இபிஎஸ் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். “தமிழக மீனவர்களும் இந்தியர்கள்தான் என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். எனவே அவர்களை விடுவிக்குமாறு, இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வினேஷ் போகத் விவகாரத்தில், ஒலிம்பிக்ஸ் தொடர் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று, சர்வதேச விளையாட்டுத்தீர்ப்பாயம் கூறியுள்ளது. உடல் எடை 100 கிராம் அதிகம் இருந்ததால், ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து, அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில், இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் தாக்கல் செய்த வழக்கை, நீதிபதி அனபெல் பெனட் இன்று மாலை விசாரிக்கவுள்ளார்.
மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிக்கு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்த மாணவி தொடுத்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தக் கல்லூரியின் உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கும் உங்களால், பொட்டு, திலகம் இடுவதற்கு தடைவிதிக்க முடியுமா? என்றும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
கல்லீரலில் உள்ள நச்சுகள் நீங்கி சுத்தமாக சில பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது, திராட்சை, மாதுளை, பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், தர்பூசணி, எலுமிச்சை ஆகியவற்றை பழமாகவோ, அல்லது ஜூஸ் செய்தோ உட்கொள்ள வேண்டும். அப்படி உட்கொண்டால், கல்லீரல் சுத்தமாகும் என்றும், அது தொடர்பான நோய்கள் நம்மை அண்டாது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்காக 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு, தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எந்தக் கொடியை பயன்படுத்துவது என்பது பற்றி விஜய்தான் முடிவெடுப்பார் எனக் கூறப்படுகிறது. ‘கோட்’ படம் வெளியாகும் வரை, கட்சித்தொடர்பாக எந்த ஒரு புதிய அறிவிப்பும் வராது. செப். 5-க்கு பிறகு, கொடி, மாநாடு தேதி என அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிகிறது.
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிவரும் 69 இந்தியர்களை மீட்க அழுத்தம் தரப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். தவறாக வழிநடத்தப்பட்டு இந்தியர்கள் ரஷ்யா சென்றதாகவும், இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சரிடம் தீவிரமாக பலமுறை முறையிட்டதாகவும் அவர் கூறினார். மேலும், அவர்களை வேறு வேலைக்கு அனுப்பிய பின், இந்தியாவிற்கு அனுப்புவதாக, ரஷ்ய அதிகாரிகள்
உறுதியளித்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
வினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்க மத்திய அரசு போதுமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இறுதிப்போட்டியின் போது எடை எவ்வாறு அதிகரித்தது, அதற்கு பின் என்ன சதி அரங்கேறியது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்ற அவர், 100 கிராம் எடை அதிகம் என்று கூறி, அவரைத் தகுதிநீக்கம் செய்திருப்பது பலவேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் நடைபெற்ற ’சூர்யா 44’ படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது, நடிகர் சூர்யாவின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சில நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 26ஆம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கடும் துயரத்தில் இருந்து கேரள மக்கள் தற்போது வரை மீள முடியவில்லை. இதனால், பண்டிகையை எளிமையாக வீடுகளில் கொண்டாடுமாறும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.