India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய், கமல் என பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து நட்சத்திர இயக்குநராக மாறினார். ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். இந்நிலையில், சூரரைப்போற்று புகழ் சுதா கொங்கராவின் அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இதுதொடர்பாக அவருடன் படக்குழுவினர் பேசி வருவதாக தெரிகிறது.
ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு, பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். நீரஜ் சோப்ராவுக்கு ஏற்பட்ட காயம் குறித்தும் அவரிடம் கேட்டறிந்த பிரதமர், தங்களால் இந்திய மக்கள் பெருமையடைவதாகவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தங்கம் வெல்லவில்லை என்பதற்காக வருந்த வேண்டாம் எனவும், எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு நிச்சயம் அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு அணியின் பயிற்சியாளராக இருக்க விரும்புவதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். தேசிய அணிகளின் பயிற்சியாளராக இருந்தால், தன்னால் குடும்பத்துடன் போதிய நேரம் செலவிட முடியாமல் போய் விடும் என்ற அவர், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு வந்தால் அதை ஏற்க போவதில்லை என்றார். டெல்லி அணியின் பயிற்சியாளராக 7 ஆண்டுகள் இருந்த அவர், அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) மாநிலக்கூட்டத்தை கள்ளக்குறிச்சியில் நடத்த, நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், 400 பேர் வரை மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென நிபந்தனை விதித்து, கூட்டத்துக்கு அனுமதி வழங்கியது. முன்னதாக, 1000 பேர் பங்கேற்க அனுமதி கேட்டதால், போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். “ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடங்கல்களை எல்லாம் சந்தித்தார் என உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், தடங்கல்களை கண்டு அவர் பயப்படவில்லை. அசாத்திய துணிச்சலோடு போராடி, இன்று நாம் அனைவரும் புகழும் இடத்திற்கு வந்திருக்கிறார். அவரைப்போல மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும்” என முதல்வர் ஆலோசனை வழங்கினார்.
நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு, உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்வை ஒத்திவைக்க நீதிமன்றத்தை நாடுவது தற்போது வழக்கமாகியுள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தற்போதையை சூழ்நிலையில் தேர்வை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர். முதுநிலை நீட் தேர்வு, 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 11ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக ஆய்வு செய்ய 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர்கள் 21 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் அந்த குழுவில் உள்ளனர். திமுக, பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். திமுகவைச்சேர்ந்த ஆ.ராசா, இக்குழுவில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி ₹3 கோடிக்கும் குறைவான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை 0.05% அதிகரித்துள்ளது. அதன்படி, 7 நாள் முதல் 29 நாள் வரையிலான டெபாசிட்களுக்கு 3% வட்டி வழங்கப்படுகிறது. அதேபோல, 30 நாள் முதல் 45 நாள்களுக்கு 3.5%, 40 நாள் முதல் 60 நாள்கள் வரை 4.25% வட்டி வழங்கப்படுகிறது. மேலும், 15 மாதங்களுக்கு குறைவான FDக்கு 6.7%, 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் கொடுத்திருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நான் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக நிற்கிறேன். அவருடைய வலி ஒரு விளையாட்டு வீரருக்குத்தான் தெரியும். அவருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கியிருக்க வேண்டும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.