India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழலால், இந்திய எல்லையில் அந்நாட்டு இந்துக்கள் குவிந்து வருகின்றனர். எல்லை அருகேயுள்ள இந்தியாவின் பதன்துலியில் குவிந்து வரும் அவர்களை, பாதுகாப்புப்படையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், ஏராளமான பாதுகாப்புப் படையினர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு AI எடுத்துச் சென்றுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதை பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ChatGPT 4.o-இல் குரலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் அதனுடன் பேசி வருகின்றனர். இந்நிலையில், அப்படி பேசுபவர்கள் கவனமாக இருக்குமாறும், பலர் அந்தக் குரலால் வசீகரிக்கப்படுவர் எனவும் Open AI எச்சரித்துள்ளது.
துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையூறு செய்வதாக தமிழக காங்.தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகளை முடக்க, ஆளுநர்களை பாஜக பயன்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாகவும் சாடினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடி நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் வேலூர் சிறையில் உள்ள நாகேந்திரனை, இந்த வழக்கிலும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் சமீபத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த வழக்கில் 23 பேர் கைதாகி இருக்கின்றனர்.
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு
வெள்ளிப்பதக்கம் அளித்திருக்க வேண்டும் என்று, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குரல் எழுப்பியுள்ளார். போதைப்பொருள் போன்ற விவகாரங்களுக்கு முற்றிலுமாக தகுதிநீக்கம் செய்வது சரியென்றும், எடை அதிகரித்ததற்கு தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விளையாட்டுத்தீர்ப்பாயத்தில் நல்ல தீர்ப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
கோவிட் தொற்றின்போது 18 மாதங்கள் நிறுத்தப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை, மீண்டும் வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அரசிடம் ‘அதற்கான எந்த திட்டமும் இல்லை’ என்றார். 18 மாத ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு ரூ.34,402 கோடி சேமிக்கப்பட்டு, கொரோனாவால் ஏற்பட்ட நிதி இழப்பை சரிகட்ட பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. திங்கட்கிழமை வரை மாநிலங்களவை நடைபெற இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக, ஒருநாள் முன்னதாகவே ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை என INDIA கூட்டணி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கோபமான அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர், அவையை முன்கூட்டியே ஒத்தி வைத்தார்.
கேரள மாநிலத்திலுள்ள வயநாடு, கோழிக்கோடு பகுதிகளில் இன்று காலை எவ்வித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என, தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) உறுதி செய்துள்ளது. இன்று காலை 10.10 மணியளவில் பூமிக்கு அடியில் மிகப்பெரிய சத்தம் மற்றும் அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதைத்தொடர்ந்து, புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், நிலநடுக்கம் பதிவாகவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலைப்போக்க, சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று (09.08.2024) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், பண்ருட்டி, சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக நாளை காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மீண்டும், 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பதாக, 2D தயாரிப்பு நிறுவனத்தலைவர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘சூர்யா 44’ படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று காலை நிகழ்ந்த விபத்தில் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. தற்போது, அவர் நலமாக இருப்பதாக, படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.