India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என, தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார். ஜம்முவில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் பேட்டியளித்த அவர், தேர்தலை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளை, மக்கள் தோற்கடிப்பார்கள் என்றார். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை, நமது ராணுவத்திற்கு உள்ளதென்றும் குறிப்பிட்டார். அங்கு, செப்.30க்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு இம்மாதம் அட்டைகள் விநியோகிக்கும் பணி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய ரேஷன் அட்டை பெறுபவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தகுதி பெற்றவராக இருந்தால், விண்ணப்பிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் பயனாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி பால் கனகராஜிடம் 7 மணி நேரமாக நடந்த விசாரணை நிறைவு பெற்றது. வழக்கறிஞரும், பாஜக நிர்வாகியுமான பால் கனகராஜ், போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். தேடப்படும் ரவுடி சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் ஆகியோரின் வழக்குகளை நடத்தியதால், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
தமிழகத்தில் இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, பிரதமர் மோடி நாளை கேரளா செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், திருவனந்தபுரம் செல்லும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிடுகிறார். பிரதமரின் வருகை காரணமாக, வயநாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கு இதுவரை 400க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘Laapataa Ladies’ படத்தை அமீர் கானுடன் இணைந்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ரசித்தார். அமீர்கான் தயாரிப்பில், கிரண் ராவ் இயக்கத்தில் மார்ச் 1இல் வெளியான இந்த படம், பாலின சமத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி, இந்த படம் நீதிமன்ற வளாகத்தின் சி பிளாக்கில் திரையிடப்பட்டது. நீதிபதிகளின் குடும்ப உறுப்பினர்களும் படத்தை பார்த்து ரசித்தனர்.
‘G.O.A.T’ திரைப்படம் EPIQ தொழில்நுட்பத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படம், செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தியை, ஒலிம்பிக்ஸில் வெண்கலப்பதக்கம் வென்ற மனு பாக்கர் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில், 2 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மனுபாக்கர், நேற்று முன்தினம் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், இன்று ராகுலை சந்தித்தார். மனு பாக்கருக்கு, மலர்க்கொத்து மற்றும் இனிப்பு
வழங்கி, ராகுல்காந்தி வாழ்த்தினார்.
2025 ஜனவரி 1ஆம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை, ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை மேற்கொள்ள, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலை 2025 ஜனவரி 26ஆம் தேதி வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல், அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தமிழக அரசின் அலட்சியத்தால் ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை 15 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதை எதிர்த்து, ஏன் தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இனியும், ஏழை மக்களின் உயிரோடு அரசு இனியும் விளையாடக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.