India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ₹10,000 நிதி உதவி வழங்கப்படும் என, கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வருவாய் ஆதாரங்களை இழந்துள்ள குடும்பங்களில் பெரியவர்களுக்கு (18 வயதுக்கு மேல்) நாள் ஒன்றுக்கு தலா ₹300 நிதி உதவி வழங்கப்படும் எனவும், இந்த நிதி அதிகபட்சமாக 30 நாள்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோயிலைப்பூட்டி வைப்பது, சாமியை சிறை வைப்பதற்கு சமம் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மதுரை உத்தபுரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில்களை திறப்பது தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த அவர், சிறையிலுள்ள கைதிகளுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைப்பதாகவும், இந்த வழக்கில் சாமிக்கு தேவையான பூஜை உள்ளிட்டவை கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் நடிகை என்று தன்னை மரியாதை குறைவாக பேசிய மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் மன்னிப்பு கேட்கவேண்டும் என, எம்.பி ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கு போதிய வாய்ப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அவர், தன்னை அவைத்தலைவர் அவதூறாக விமர்சிப்பதாகவும், 5 முறை எம்.பியாக இருந்த தனக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
முல்லைப்பெரியாறு அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக யாரும் அச்சப்பட வேண்டாம் என கூறிய அவர், முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முடிவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார். முன்னதாக, முல்லைப்பெரியாரில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக, கேரள காங்கிரஸ் எம்.பி குரியகோஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில், ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தேசியக்கொடியை ஏந்திச்செல்வார் என இந்திய ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. ஒலிம்பிக்ஸ் நிறைவு விழாவில், இரட்டை வெண்கலம் வென்ற மனு பாக்கர் இந்திய தேசியக்கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஹாக்கியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்ரீஜேஷ், மனு பாக்கருடன் இணைந்து தேசியக்கொடியை ஏந்திச்செல்லவுள்ளார்.
ஓலா மின் வாகனங்களை தயாரிக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், இன்று பங்குச்சந்தையில் கால் பதித்தது. ஒரு பங்கின் விலை ரூ.76 என சந்தையில் கால்பதித்த ஓலா, ஒரே நாளில் மளமளவென உயர்ந்து ரூ.91.20 வரை விற்றது. ஒரு பங்கின் விலை நாளொன்றுக்கு 20% மட்டுமே உயரலாம் என்ற விதி இருப்பதால் இன்றைய வர்த்தக நேர முடிவில் ஓலா ரூ.91.20க்கு விற்றது. இது, நாளை மேலும் உயரும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் நாளை அனைத்துப்பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவை, பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளது. ஆகையால், நாளை (10.08.2024) மற்றும் 24.08.2024 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்காது.
‘வேட்டையன்’ பட டப்பிங் பணிகளை நடிகை ரித்திகா சிங் தொடங்கியுள்ளார். ஞானவேல் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டப்பிங் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
மாணவர்களுக்குத் துணையாக, அவர்களது பெற்றோர் மட்டுமல்ல, தானும், தனது திராவிட மாடல் அரசும் பக்கபலமாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வாழ்வில் சில நாள்கள் வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும் எனவும், அத்தகைய நாள், தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட இந்த பொன்னாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரங்களில் கமலா ஹாரிஸை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். வாஷிங்டனில் பேட்டியளித்த டிரம்ப், “நாம் ஒரு உலகப் போரை எதிர்நோக்கி இருக்கிறோம். கமலா ஹாரிஸால் இதுபோன்ற போரை சமாளிக்க முடியாது. அவர் ஜோ பைடனை விட மோசமானவர்” என குறை கூறினார்.
Sorry, no posts matched your criteria.