India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேஷம் – லாபம், ரிஷபம் – நன்மை, மிதுனம் – போட்டி, கடகம் – தனம், சிம்மம் – வெற்றி, கன்னி – அமைதி, துலாம் – பயம், விருச்சிகம் – தாமதம், தனுஷ் – நலம், மகரம் – கோபம், கும்பம் – திறமை, மீனம் -புகழ்.
உளுந்தூர்பேட்டையில் புதிதாக விமான நிலையம் அமைக்க வேண்டும் என, மக்களவையில் விசிக எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், அவ்வாறு செய்தால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். விமானக்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வயநாடு நிலச்சரிவை, தேசிய பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார் என நம்புவதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு சேதத்தை பிரதமர் நாளை பார்வையிட செல்வது குறித்து, தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சேதத்தை பார்வையிட்ட பின், தேசிய பேரிடராக அறிவிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். வயநாடு செல்லும் பிரதமருக்கு நன்றி என்றும், ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு 1 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்கு, நடிகைகள் மீனா, குஷ்பு, சுஹாசினி உள்ளிட்டோர் இணைந்து, ₹1 கோடிக்கான காசோலையை, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நாடு முழுவதில் இருந்தும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர், நடிகைகள் பலரும் நிதியுதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மாதவிடாய் காரணமாக வெற்றி வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளார். 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், 4ஆவது இடத்தை பிடித்தார். தோல்வி குறித்து அவர் பேசுகையில், “போட்டியின்போது எனக்கு மாதவிடாயின் மூன்றாவது நாள். மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். அதனால் பதக்கம் பறிபோனது” என வருத்தத்துடன் தெரிவித்தார்.
நாட்டில் வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லையென, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், தேர்தலுக்கு முன்னதாக கட்சிகள் இலவசங்களை விநியோகிப்பதைக் கட்டுப்படுத்தும் திட்டம் இல்லை என்றார். மேலும், மக்களவைத்தேர்தலில் 65.79% வாக்குகள் பதிவானதாகவும் குறிப்பிட்டார்.
My V3 Ads செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்தப்போவதாக, கைது செய்யப்பட்ட My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்த் கூறியிருந்த நிலையில், செயலி முடக்கப்பட்டுள்ளது. விளம்பரம் பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, மோசடி செய்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் அன்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதமே, சிறையில் இருந்து விடுதலையாக காரணம் என, மணீஷ் சிசோடியா கூறியுள்ளார். டெல்லி திகார் சிறையில் இருந்து விடுதலையான அவர், சர்வாதிகார அரசுகள் எதிர்க்கட்சித்தலைவர்களை சிறையில் அடைத்தால், அம்பேத்கரின் அரசியலமைப்புச்சட்டம், அவர்களைப் பாதுகாக்கும் என்றார். தனது விடுதலை ஆரம்பம்தான் என்றும், மற்ற எதிர்க்கட்சித்தலைவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆக.31 இல் நடைபெறும் ஃபார்முலா-4 கார் பந்தயம் அவசியம் தேவையா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப்போராடி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். பதவி உயர்வு தராமல் தொகுப்பூதியம் கொடுக்கும் அளவிற்கே அரசின் நிதிநிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், இந்த கார் பந்தயம், யாரை மகிழ்விக்க நடத்தப்படுகிறது எனவும் வினவியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.