India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணாமலை வெளிநாடு சென்றதால் அடுத்த 3 மாதங்களுக்கு தமிழகம் நிம்மதியாக இருக்கும் என EX அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி, தொழில், ரயில்வே திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அதைப் பற்றி கேள்வி எழுப்ப தமிழக பாஜகவினர் தயாராக இல்லை எனவும் விமர்சித்தார். தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு உடனே தரவும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி வரை) 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், நாமக்கல், சேலம், மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு FIA முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் பாதுகாப்பு சோதனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவு மாலை 6 மணியளவில் கிடைக்கும் எனவும், இரவு 7 மணியளவில் பயிற்சி போட்டிகள் தொடங்கும் என்றும் போட்டி நடத்தும் அமைப்பின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அவர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ரஜினி உடன் அவர் நடித்த மிஸ்டர் பாரத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன்பின் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. சுமார் 38 ஆண்டுகளாக பின் இருவரும் இணைந்துள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறைந்த முதலீட்டில் பிசினஸ் தொடங்க விரும்புபவர்கள் ஊறுகாய் வியாபாரத்தை தொடங்கலாம். இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் வெவ்வேறு வகையான ஊறுகாய் மற்றும் சட்னிகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. உங்களுக்கு கைப்பக்குவத்தோடு ஊறுகாய் செய்யத் தெரிந்தால், இந்த தொழில் நல்ல தேர்வாக இருக்கும். நல்ல முறையில் பேக் செய்து அருகில் இருக்கும் மளிகை கடைகளில் விற்பனைக்கு கொடுக்கலாம். All the best.<<-se>>#Business<<>>
பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் முகேஷ், MLA பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகை பாலியல் குற்றச்சாட்டு ஆட்டிப் படைக்கிறது. இந்த சர்ச்சையில் சிக்கிய நடிகரும், கொல்லம் தொகுதி MLAவுமான முகேஷ் பதவி விலகக்கோரி 2 நாட்களாக காங்., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீமான் கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோவால் கடும் அப்செட்டில் இருந்த, நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், கட்சியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், அரசியல் கட்சியில் கருத்து முரண்கள் ஏற்படுவது இயல்புதான். எனவே, இன விடுதலையையும், கட்சியின் இதர சூழலையும் கருத்தில் கொண்டு நாதகவில் தொடர்ந்து பயணிக்கிறேன் என விளக்கமளித்துள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை அடுத்து, பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) ஆய்வு நடத்தியது. இதில், தங்களுக்கு இரவு பணிகளின் போது Duty Room ஒதுக்கப்படவில்லை என 45% பெண் மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்படியே அறை ஒதுக்கப்பட்டாலும் அங்கு கழிவறை இருப்பதில்லை என்றும், இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9 முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மானுவேல் சேகரனார் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு, வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் அனுமதியின்றி நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்.11ஆம் தேதி ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
*எலுமிச்சையில் ஸ்ட்ராபெர்ரியை விட அதிக சர்க்கரை உள்ளது. *8% பேருக்கு கூடுதல் விலா எலும்பு உள்ளது. *85% தாவர உயிரினங்கள் கடலில் காணப்படுகின்றன. *ஈர்ப்பு விசை இல்லாவிட்டால், பறவைகளால் உணவை விழுங்க முடியாது. *ஆங்கிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் எழுத்து ‘E’. *மனித உடலில் மிகச்சிறிய எலும்பு காதில் காணப்படுகின்றன. *பூனைகள் வாழ்நாளில் 66% நேரம் தூங்குகின்றன. தகவல் பிடித்திருந்தால் லைக் போடுங்க.
Sorry, no posts matched your criteria.