India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமர் குறித்து அமைச்சர் ரகுபதி சொன்னதை சிலர் திரித்து சொல்வதாக திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி கூறியுள்ளார். “திராவிட மாடலின் முன்னோடி ராமர்” என ரகுபதி பேசியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு RS பாரதி, தமிழ்நாட்டில் நல்ல ராஜ்யம் நடக்கிறது என்பதை ரகுபதி அப்படி சொல்லியிருப்பார் என்று பதிலளித்தாா். ராம ராஜ்யம் குறித்த ஆராய்ச்சிக்குள் சென்றால் தேவை இல்லாத சிக்கல் எழும் என்றும் அவர் கூறினார்.
ஒலிம்பிக்ஸில் அமெரிக்கா, சீனா தலா 33 தங்கப்பதக்கங்களுடன், தங்கம் வென்ற நாடுகள் வரிசையில் சமமாக உள்ளன. அதேநேரத்தில், அமெரிக்கா 39 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களைக் கைப்பற்றி, மொத்த பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனா 27 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் 69வது இடத்தில் உள்ளது.
22 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் 7 மணி வரை மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சக்தி வழிபாட்டுக்கு சிறந்த மாதமாக கருதப்படும் ஆடி சஷ்டி திதியில் முருகனுக்கு விரதமிருந்தால் விதி என்பது ஆன்றோர் வாக்கு. அதிகாலையில் நீராடி, குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு சென்று, கார்த்திகை மைந்தனுக்கு செவ்வரளிப்பூ மாலைச் சாற்றி, 6 நெய் விளக்கு ஏற்றி, தேன் கலந்த தினைமாவை படைத்து, திருப்புகழ் பாடி வழிபட்டு, முதியவர்களுக்கு உணவிட்டால் குன்றாத செல்வமும், நோயற்ற வாழ்வும் கிட்டும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் இன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவை, பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளது. ஆகையால், இன்றும் (10.08.2024) அடுத்த சனிக்கிழமையும் (24.08.2024) பள்ளிகள் இயங்காது.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, பிரதமர் மோடி இன்று கேரளா செல்கிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், திருவனந்தபுரம் செல்லும் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், நிலச்சரிவு நேரிட்டப் பகுதிகளைப் பார்வையிடுகிறார். பிரதமரின் வருகை காரணமாக, வயநாட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுக்கு இதுவரை 400க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
*வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்றுங்கள் – மோடி *வக்ஃபு வாரிய சொத்துக்களை முஸ்லீம்களிடமிருந்து பறிக்க பாஜக சதி செய்கிறது – வைகோ *பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்து *ஆல்டோ கே-10 திரும்ப பெறுவதாக மாருதி சுசூகி நிறுவனம் அறிவித்தது *Paris Olympics: 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.
✍மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார், ஆனால் இயற்கையே குணப்படுத்துகிறது. ✍அளவுக்கு மிஞ்சிய அனைத்தும் இயற்கைக்கு எதிரானது. ✍பயன்படுத்தப்படுவது வளர்ச்சியடைகிறது; பயன்படுத்தப்படாதது வீணாகிறது. ✍சில நேரங்களில் அமைதியாக இருப்பதே நல்லது.✍புரிந்துகொள்ள முடியாத அனைத்தையும் தெய்வீகம் என்று அழைத்தால், தெய்வீகமான விடயங்களுக்கு முடிவே இருக்காது.✍முன்னோர்களால் அடையப்பெற்ற அறிவை, அறியாமல் இகழுபவன் ஒரு முட்டாள்.
*ஈரான்: புதிய அதிநவீன ஏஐ தொழில்நுட்ப ஏவுகணையை ஈரான் விமானப் படை அறிமுகப்படுத்தியுள்ளது. *ஆஸ்திரியா: பாடகி டெய்லர் ஸ்விப்டினின் இசை நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 2 தீவிரவாதிகள் கைது. *பிரேசில்: நிகரகுவா தூதர் புல்வியா பாட்ரிசியா காஸ்ட்ரோவை பிரேசில் அரசு வெளியேற்றியுள்ளது. *ரஷ்யா: கிரீமியாவை நோக்கி உக்ரைன் அனுப்பிய 43 டிரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது.
சட்டத்திருத்த மசோதா மூலமாக வக்ஃபு சொத்துக்களை இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கும் சதியை பாஜக அரங்கேறியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். வக்ஃபு வாரியம் எதற்காக ஏற்படுத்தப்பட்டது? எனக் கேள்வி எழுப்பிய அவர், 40 திருத்தங்களை மேற்கொள்ளப் போவதாக அறிவித்து, அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மோடி அரசு ஒழித்துக் கட்டியுள்ளதாகக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.