India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இறைப் பணிக்காகவும், ஏழை – எளிய முஸ்லிம் மக்களின் நலனுக்காகவும் முஸ்லிம் மன்னர்களும், செல்வந்தர்களும் பல சொத்துக்களைத் தானமாகக் கொடுத்தனர். இந்த சொத்துக்களைப் பராமரித்து, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை நிர்வகித்து, அதை கொண்டு மக்கள் சேவையாற்றும் அறங்காவலர்களை முத்தவல்லிகள் என அழைப்பர். முத்தவல்லிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்த 1954இல் உருவாக்கப்பட்டதுதான் வக்ஃபு வாரியமாகும்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இபிஎஸ் ஒத்தி வைத்ததற்கு, ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து அக்கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதே காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் 16ம் தேதி நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் இபிஎஸ்க்கு கடும் அழுத்தம் தரப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை இபிஎஸ்சும் அறிவார். அனைத்தையும் எளிதில் சமாளிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
காதலன் மத்தியாஸ் போ துபாய்க்கு அழைத்த போது, அவர் என்னை அங்கு விற்று விடுவார் என தோழிகள் பயமுறுத்தியதாக நடிகை டாப்ஸி குறிப்பிட்டுள்ளார். துபாயில் வசிக்கும் தோழியின் அக்கா ஒருவரின் நம்பரை கொடுத்து, தொடர்பு கொள்ளச் சொல்லியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறதாகவும், அதன்பின் பல வருடங்கள் காதலித்த பின்னரே இருவரும் கரம் பிடித்ததாகவும் கூறியுள்ளார்.
நீண்ட நாள்களாக நீடித்து வரும் இடுப்பு வலிக்கு தடகள வீரர் நீரஜ் சோப்ராவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குடலிறக்கத்தால் அவதிப்படுவதன் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அவரின் பயிற்சியாளரின் பதவி காலம் முடிந்ததால், பயிற்சியாளர் மாற்றம் இருக்கக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. அதனால், கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாகக் குடை, ரெயின்கோட் எடுத்துச்செல்லவும்.
நடிகை மமிதா பைஜு பெயரில் எக்ஸ் தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி அவதூறு செய்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தனக்கு எக்ஸ் தளத்தில் கணக்கு இல்லை எனவும், அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ‘பிரேமலு’ என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமான மமிதா, தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சிக்குள் பூசல் நிலவவில்லை என்று அக்கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மறுத்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், அரசியல் கட்சியில் கருத்து வேறுபாடு நிலவுவது இயற்கையே என்றும், ஆனால் நாதகவுக்குள் சிலர் சிண்டு முடிய முயற்சிக்கின்றனர் என்றும் கூறினார். கட்சியை விட்டு வெளியே செல்வோர் தனி அமைப்பு தொடங்குவது தனிப்பட்ட உரிமை என்றும் அவர் கூறினார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கத்தை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் (IOA) உறுதி தெரிவித்துள்ளது. அப்படி கிடைக்கும் பட்சத்தில் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. நேற்று 3 மணி நேரம் நீடித்த விசாரணையில், எந்த வித முறைகேடுகளிலும் அவர் ஈடுபடவில்லை என IOA தரப்பில் அழுத்தமான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவப் படிப்பு, சட்டம் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். 8, 10ஆம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி படிப்பவர்களும் இதன் மூலம் பயன்பெறலாம்.
மகாலட்சுமிக்கு உரிய நேரம் எது என்பது குறித்து ஆன்மிகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதைத் தெரிந்து கொள்வோம். தினமும் வீட்டில் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். அந்த நேரமே மகா லட்சுமிக்கு உகந்த நேரம் ஆகும். அந்த நேரத்தில், சாப்பிடுவது, தூங்குவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சாமி வழிபாடு மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.