news

News August 10, 2024

கடன்களுக்கான வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்

image

நிதி அடிப்படை கடன்களுக்கான (MCLR) வட்டியை கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, யுகோ ஆகிய 3 பொதுத்துறை வங்கிகள் உயர்த்தியுள்ளன. 12ஆம் தேதி முதல் கடனுக்கான வட்டியில் 5 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்க கனரா வங்கி முடிவு செய்துள்ளது. பேங்க் ஆப் பரோடாவும் 12ஆம் தேதி முதல் வட்டியை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. யுகோ வங்கி இன்று முதல் வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி உயரும்.

News August 10, 2024

சீமானை மனிதராகவே கருதவில்லை : RS பாரதி

image

சீமானை மனிதராகவே கருதவில்லை என்று திமுக அமைப்பு செயலாளர் RS பாரதி விமர்சித்துள்ளார். கருணாநிதி, திமுகவை சீமான் விமர்சிப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சீமான் பகுத்தறிவுள்ள ஒரு சராசரி மனிதர் கிடையாது என்று குற்றஞ்சாட்டினார். திமுகவை முன்பு விமர்சனம் செய்தவர்கள் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய் விட்டனர் எனவும், இது சீமானுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்தார்.

News August 10, 2024

கடத்தப்பட்ட குழந்தை 15 மணி நேரத்தில் மீட்பு

image

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார் 15 மணி நேரத்தில் மீட்டனர். மேலும், கடத்திச்சென்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கதுரை- வெண்ணிலா தம்பதியின் பிறந்து 5 நாள்களே ஆன ஆண் குழந்தையை நேற்று செவிலியர் எனக் கூறி, பரிசோதனைக்கு எடுத்துச்செல்வதாக அப்பெண் மருத்துவமனையில் இருந்து கடத்திச் சென்றார்.

News August 10, 2024

ஆளுநராக விரும்பும் பொன் ராதாகிருஷ்ணன்?

image

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் ஆளுநராக காய் நகர்த்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, பாஜக மாநிலத் தலைவர்களாக இருந்த பலரும் ஆளுநர்களாகிவிட்டனர். இதைப் பார்த்த பொன் ராதாகிருஷ்ணன் தானும் ஆளுநராக விரும்பி கடந்த சில நாள்களாக டெல்லியில் தங்கி பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

News August 10, 2024

உள் ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருடன் எம்பிக்கள் சந்திப்பு

image

பாஜகவின் SC, ST பிரிவைச் சேர்ந்த எம்பிக்கள் பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதி அளித்தார்.

News August 10, 2024

10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்த வீரர்

image

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத், 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்துள்ளார். அரையிறுதி முடிவில் 61.5 கிலோ இருந்த அமன், இறுதிப் போட்டியின் போது 56.9 கிலோவாக இருந்தார். 1 மணி நேரம் வெந்நீர் குளியல், 1 மணி நேரம் டிரட்மில்லில் தொடர் ஓட்டம், 15 நிமிடங்கள் வீதம் 5 முறை ஓட்டப்பயிற்சி என இரவு முழுவதும் கடுமையான பயிற்சி வழங்கப்பட்டதாக பயிற்சியாளர்கள் கூறியுள்ளனர்.

News August 10, 2024

நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை: MET

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது. 12ம் தேதி 17 மாவட்டங்களில், 13ம் தேதி 11 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

News August 10, 2024

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா என்ன சொல்கிறது? (1/2)

image

வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களின் விவரம் இங்கே: *வக்ஃபு சொத்துக்கள் பற்றிய தகவல்களை தொகுத்து, மத்திய அரசின் இணையத் தளத்தில் பதிவிட வேண்டும் *சொத்துக்களை பதிவு செய்வதில் வருவாய் சட்டங்கள் பின்பற்றப்படும். *வக்பு வாரியங்களில், சன்னி, ஷியா, போரா, அகாகானிஸ் & அந்த மதத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் பெண்களும் இடம்பெற அனுமதிப்படுவர்.

News August 10, 2024

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா என்ன சொல்கிறது? (2/2)

image

*வக்ஃபு கவுன்சில் & வாரியத்தின் சொத்துக்களை ஆட்சியரால் நியமிக்கப்படும் துணை கலெக்டர் ஆய்வு செய்ய முடியும். *வாரிய சொத்துகள் மீதான முடிவுகள் எடுக்கும் அதிகாரம் ஆட்சியருக்கு அளிக்கப்படும். *3 எம்.பி.,க்கள் கொண்ட வாரிய குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறுவர். *வாரியத்தின் உத்தரவுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிடலாம். *சொத்துக்களை வாரியம் நிர்வாகிக்கலாம், ஆனால் அவற்றை உரிமை கோர முடியாது.

News August 10, 2024

தேர்தல் பத்திரத்துக்கு மாற்று கொண்டு வரப்படாது: அரசு

image

தேர்தல் பத்திரத்துக்கு மாற்றாக வேறு திட்டம் கொண்டு வரப்பட மாட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எந்தச் சட்டத்தையும் கொண்டுவரும் திட்டம் இல்லை என்றார்.

error: Content is protected !!