India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய நிறுவனம் ஒன்றின் முக்கிய ரகசியத்தை விரைவில் வெளியிடப் போவதாக ஹிண்டன்பெர்க் அறிவித்துள்ளது. எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், “விரைவில் இந்தியா குறித்த மிகப்பெரிய தகவல்” என சூசகமாக தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நிறுவனம் என பெயரை குறிப்பிடவில்லை. கடந்த 2023இல் ஹிண்டன்பெர்க் வெளியிட்ட அறிக்கையால் அதானி குழுமம் 100 பில்லியன் டாலருக்கு இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு காசாவில் புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தும் உள்ளனர். இத்தாக்குதல் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்டது. இடம்பெயர்ந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கடந்த வாரம் 4 பள்ளிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 10 மாதங்களாக நீடிக்கும் போரில் இதுவரை 40,000 பாலஸ்தீனர் கொல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக EPFO முன்பணம் வழங்குகிறது. EPFO இணையதளம் சென்று UAN, Password பயன்படுத்தி உள்நுழையவும். ஆன்லைன் சேவைகள் பிரிவில் ‘Claim’ விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். PF Advance Form 31 விருப்பத்தை தேர்வு செய்து, வங்கி அட்டையின் முதல் பக்கத்தை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். தொடர்ந்து OTP-ஐ உள்ளீடு செய்து விண்ணப்பித்தால் 3-20 நாள்களுக்குள் பணம் கிடைக்கும்.
மகளிர் உரிமைத்தொகை போல், ஆண்களுக்கும் எதிர்காலத்தில் மாதம் ₹1000 உரிமைத்தொகை வழங்க வாய்ப்புள்ளதாக, அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். ஆண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளதாக குறிப்பிட்ட அவர், வரும் காலத்தில் அந்த ஏக்கத்தை தீர்த்து வைப்பதற்கான சூழல் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
வங்கதேசத்தில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை இந்தியா அனுமதிக்கக் கூடாதென, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சாஜீப் வசேத் ஜாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவிலிருந்து அவர் அளித்த பேட்டியில், வங்கதேசம் இந்தியாவின் அண்டை நாடு. அங்கு பிற சக்திகள் தலையீடு இருக்கக் கூடாதென்றார். வங்கதேச இடைக்கால அரசு மக்களால் தேர்வு செய்யப்படவில்லை என்பதால். அரசியலமைப்பு சட்ட விரோதமானது என்றும் கூறினார்.
ஒரு நாள் உலகக்கோப்பையில் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியது போன்ற ஒரு சுகமான உணர்வு தன் கிரிக்கெட் வாழ்வில் வேறெதுவும் இருக்காது என ஆஸி., வீரர் ஆடம் ஜம்பா தெரிவித்துள்ளார். இறுதி போட்டியின் போது 1.20 லட்சம் இந்தியர்கள் குவிந்ததாகவும், அது இந்தியவுக்கான கோப்பை என ரசிகர்கள் நினைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸி., வெல்வதற்கு அதிசயம் நிகழ வேண்டும் என்ற சூழல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில்
வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத், தனது 11 வயதில் பெற்றோரை இழந்தவர். ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற வீரர்கள், டெல்லி சட்ரசல் மைதானத்தில் அவருக்கு பயிற்சியளித்தனர். இந்த வெற்றியை பெற்றோருக்கு சமர்ப்பிப்பதாகவும், பெற்றோருக்கு ஒலிம்பிக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது, இருப்பினும், தான் மல்யுத்த வீரராக வேண்டும் என்பதை அவர்கள் விரும்பியதாகவும் அமன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, தொடர்ந்து 3ஆவது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 உயர்ந்து ஒரு சவரன் ₹51,560க்கும், கிராமுக்கு ₹20 உயர்ந்து, ஒரு கிராம் ₹6,445க்கும் விற்பனையாகிறது. அதேசமயம், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹88க்கும், ஒரு கிலோ ₹88,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2023-24ஆம் கல்வியாண்டில் MBBS, BDS படிப்புகளுக்கு மாநிலத்தில் 43,000 பேர் நேற்று வரை விண்ணப்பித்துள்ளனர். மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீடு இடங்களுக்கு ஜூலை 31இல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. தரவரிசைப் பட்டியல் ஆக. 19ல் வெளியாகிறது. தொடர்ந்து, மாநில அரசு ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு ஆக. 21, விளையாட்டுப் பிரிவு சிறப்பு ஒதுக்கீடுக்கு ஆக. 12இல் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
7 மாநிலங்களில் 8 புதிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆந்திரா, பிஹார், ஒடிஷா உள்ளிட்ட 7 மாநிலங்களில் ₹24,657 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த 8 திட்டங்களில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான அஜந்தா குகைக்கு ரயில் இயக்கும் திட்டமும் ஒன்றாகும்.
Sorry, no posts matched your criteria.