India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அயோத்தி, வாரணாசி, கோவை, கொச்சி உள்ளிட்ட 17 நகரங்கள், ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டி பறப்பதாக Colliers India-வின் ஆய்வறிக்கை தகவல் கூறுகிறது. உலகின் 3ஆவது பொருளாதார சக்தியாக இந்தியா மாறிவரும் நிலையில், நாட்டின் வளர்ச்சியில் நகரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனால் நகரங்களில் மக்கள் குடியேறுவது அதிகரிப்பதால், 17 நகரங்கள், ரியல் எஸ்டேட் மையங்களாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய கடலோரக் காவல்படை பல்கலை.யில் பேராசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 15 உதவியாளர் பணியிடங்கள், 12 நிதி விவகார உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளோர் <
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் இருந்து அவரது கணவர் ஹேம்நாத்தை விடுவித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் 2020ல் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியிருந்தது. இந்நிலையில், அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை எனக் கூறி, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அப்படி என்றால் மரணத்திற்கு காரணம் யார்?
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று PM மோடி பார்வையிட்டு வருகிறார். இதையொட்டி, தனி விமானத்தில் சென்ற அவரை, அம்மாநில CM பினராயி விஜயன் வரவேற்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் அவர், சாலை மார்க்கமாக சென்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிய உள்ளார். அத்துடன், மருத்துவமனை, முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து ஆறுதலும் தெரிவிக்க உள்ளார்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகத் துறையில் 111 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி பொறியாளர், டிராப்ட்ஸ்மேன், சானிடரி இன்ஸ்பெக்டர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பதவிகளுக்கு ₹35,400 முதல் ₹1.38 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்படும் என்றும் <
விடுமுறைக்கு இனி களஞ்சியம் செயலி மூலமே அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியாக உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதில், கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை உருவாக்கியுள்ள களஞ்சியம் செயலியை, அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, இனி விடுமுறை, சம்பள முன்பணத்துக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷா அளித்த புகாரின் அடிப்படையில், 2023ம் ஆண்டு பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன்பேரில், அவரது வீட்டில் இச்சோதனை நடந்து வருகிறது. பாஜகவில் இவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
வடஇந்தியாவில் வசித்து வரும் பிற மொழி ரசிகர்களுக்காக 3 மொழிகளில் வெளியிட வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படம் Sept 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டின்கீழ் கட்டாயம் 25% ஏழை மாணவர்களை சேர்க்க தனியார் பள்ளிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு மனு ஒன்றை விசாரித்த SC, “சிறந்த தனியார் பள்ளிகளில் படிக்கும் உரிமை ஏழை குழந்தைக்கு உண்டு. ஏழை குழந்தைகளுடன் பழகுவதால், இந்தியா குறித்த புரிதல் பணக்கார குழந்தைகளுக்கு கிடைக்கும். அவர்கள் சந்திப்பால், நல்ல தலைவர்கள் உருவாவர்” எனத் தீர்ப்பளித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான குமார் சங்ககாரா விலக உள்ளதாகவும், ராகுல் டிராவிட் அந்த பதவியை ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சங்ககாராவை இங்கிலாந்து பயிற்சியாளராக நியமிக்க ஜோஸ் பட்லர் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, ஏற்கனவே ராஜஸ்தான் பயிற்சியாளராக இருந்த டிராவிட் மீண்டும் அந்த பதவியில் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.