India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ஹைப்பர்லூப் ரயிலை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. கடந்தாண்டு இதற்காக டத்தோங் நகரில் 2 கி.மீ. தொலைவுக்கு உருவாக்கிய வழித்தடத்தில் ரயிலை இயக்கி சீனா சோதனை செய்துள்ளது. இந்த ரயில் மாக்லேவ் தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படக் கூடியது. ரயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. எனவே, விமானத்துக்கு இணையான வேகத்தில் செல்ல முடியும்.
அவதார் படத்தின் 3ஆம் பாகத்திற்கு ‘AVATAR: FIRE AND ASH’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இந்த தலைப்பை வெளியிட்டார். இதுவரை பார்த்திடாத பல பாண்டோராக்களைப் பார்க்கலாம் எனவும், இதில் வரும் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முந்தைய படங்களை விட உணர்வுபூர்வமான காட்சிகள் இதில் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத் விவகாரத்தில் இன்று இரவுக்குள் விளையாட்டுக்கான சமரச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் அரையிறுதியில் வென்று அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப்போட்டியின்போது 50 கிலோவை விட 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
வங்கதேச போராட்டக்காரர்களின் இறுதி எச்சரிக்கையை தொடர்ந்து, ஹசீனாவின் ஆதரவாளராக கருதப்படும் அந்நாட்டின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை அதிபர் முகமதுடன் ஆலோசத்த பின் ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மதியம் 1 மணிக்குள் பதவி விலகவில்லை என்றால் வீடுகள் அடித்து நொறுக்கப்படும் என போராட்டக்காரர்கள் இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சீனாவின் நட்பு மற்றும் மேற்குலக நாடுகளின் மீதான வெறுப்பு தான், ஷேக் ஹசீனாவின் இன்றைய நிலைக்கு காரணம் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நீர்மூழ்கி கப்பல் தளம் அமைக்க சீனாவிற்கு அனுமதி, சீன ஆயுதங்கள் கொள்முதல் என இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு எதிரான வேலையை ஹசீனா செய்துள்ளார். இருப்பினும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் சமரசம் செய்ய இந்தியா முடிந்த வரை முயற்சித்து, அவரை பாதுகாத்துள்ளது.
நடிகை இந்திரஜா ஷங்கர், தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என்றும், அனைவரின் ஆசீர்வாதத்தை விரும்புவதாகவும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரோபோ சங்கரின் மகளான இவர், விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் நடிகையானார். தொடர்ந்து, கார்த்தி நடித்த விருமன் படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு மார்ச் மாதம் முறைமாமன் கார்த்திக் உடன் திருமணம் நடந்தது.
இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள IPL 2025 மெகா ஏலத்தில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அணி 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி, RTM கார்டு மூலம் வீரர்களை திரும்ப வாங்குவது உள்ளிட்ட பல மாற்றங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் நிர்வாகம், அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் மனைவி, பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு, அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் வெளியிட்ட பதிவில், படுகொலைக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்குப்பதிவா? என கேள்வியெழுப்பியுள்ளார். அவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரஷியாவுடனான போருக்கு இடையில், ஒலிம்பிக் போட்டியில் உக்ரைன் பதக்கங்களை குவித்து வருகிறது. பதக்கப் பட்டியலில் 18ஆவது இடத்தில் அந்த நாடு உள்ளது. இதுவரை 11 பதக்கங்களை உக்ரைன் வென்றுள்ளது. இதில் 3 தங்கப் பதக்கங்கள், தலா 4 வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் ஆகும். உக்ரைன் மீதான தாக்குதலை சுட்டிக்காட்டி, சர்வதேச ஒலிம்பிக் சங்கம் விதித்த தடையால், ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவில்லை.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூரில் நாளை (ஆக.11) மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலையில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.