India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடு உட்பட அனைத்து உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். இதன் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரடியாக தற்போது ஆய்வு செய்து வரும் நிலையில், இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை எப்போதும் தேசிய பேரிடர் என்ற ஒன்று அறிவிக்கப்பட்டதில்லை .
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் மகளிர் பிரிவு காலிறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ரித்திகா அதிர்ச்சித்தோல்வி அடைந்தார். 76 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி கைஸியுடன் அவர் மோதினார். இதில், 1-1 என்ற
புள்ளிக்கணக்கில் சமன் செய்தார். ஆனால், உலக சாம்பியன் போட்டியில் ஐபெரி வெள்ளிப்பதக்கம் வென்றதால், அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சி, தி.மலை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, குமரி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், குமரி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரேசிலை சேர்ந்த ஒருவர் விபத்திற்குள்ளான விமானத்தில், ஏறுவதற்கு அனுமதிக்கப்படாததால் அதிர்ஷடவசமாக உயிர்தப்பினார். தவறான விமானத்தை முன்பதிவு செய்த அவர், போர்டிங் கேட்டிற்கும் தாமதாக வந்துள்ளார். இதனால் அவர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், விமான ஊழியர்களுடன் வாக்குவாதமும் செய்துள்ளார். பிறகு, தான் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து, ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்த சில நாள்களில், REFUND இருப்பின் அதுகுறித்து உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி வருமான வரித்துறை முதலில் தெரியப்படுத்தும். உடனடியாக அதன் இணையதளத்தில் சென்று கணக்கீடு சரிதானா என்பதை பரிசோதிக்கலாம். கணக்கீடு சரியில்லை என கருதினால், உடனடியாக பிரிவு 154ல் சரிபார்ப்பு கோரிக்கையை முன்வைக்கலாம். அது ஆய்வு செய்யப்பட்டு, பிழையிருப்பின் சரி செய்யப்படும்.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரீத்திகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஹங்கேரி வீராங்கனை பெர்னாடெட் நாகியை 12 – 2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார். இன்னும் சற்றுநேரத்தில் நடைபெற உள்ள காலிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடெட் கைஸியை எதிர்கொள்கிறார்.
இன்றைய காலத்தில் இளம் வயதினர் உள்பட பலரும் நரைமுடி பிரச்னைக்கு ஆளாகின்றனர். நரை முடி ஏன் வருகிறது என்பதைக் கண்டறிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில் ‘மெலனோசைட் ஸ்டெம்’ எனும் செல்கள் முடியின் நிறத்தை தீர்மானிப்பது தெரியவந்துள்ளது. உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மெலனோசைட் ஸ்டெம் செல்கள் பலவீனமடைதல் போன்ற காரணங்களால் முடி நரைப்பது தெரியவந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. சூரல்மலை, முண்டக்கை பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டபின், முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது அங்குள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் கேட்டறிந்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்துக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி உங்களது வெற்றி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது என புகழாரம் சூட்டிய அவர், அமனின் வெற்றியால் ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமை கொள்வதாக கூறியுள்ளார். மேலும், உங்களது பெற்றோர்கள் சொர்க்கத்திலிருந்து உங்களை பார்த்து பெருமைகொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
தோனி – ரோஹித் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்விக்கு, தோனியை தேர்வு செய்வேன் என ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார். ரோஹித் தன்னுடைய சிறந்த நண்பர் எனவும், அவர் தவறாக புரிந்து கொண்டாலும் நேரில் பேசி சமாளித்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசும் வீடியோ வைரலாகி ஷர்மாவிடம் செல்லும்போது, அவர் தொலைபேசியில் கோபமான நட்புடன் பேசலாம் என்று அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.