India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நிரப்பப்பட உள்ள 17,727 Combined Graduation Level Examination (CGL) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 27ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்தது. இதில், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள நாளை (ஆக.11) கடைசி நாளாகும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் சென்று திருத்தம் மேற்கொள்ளலாம்.
உதயநிதி துணை முதல்வரானால் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறுமா ஓடப் போகிறது. இப்போது ஓடுவதைப் போல கள்ளச்சாராய ஆறுதான் ஓடும் என EX மினிஸ்டர் உதயகுமார் விமர்சித்துள்ளார். மேலும், ஜன., முதல் ஆக.8 வரை 656 கொலைகள் நடந்துள்ளது. முதல்வர் இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அதிகாரிகளை இடம் மாற்றம் செய்கிறார். இந்த 3 ஆண்டு ஆட்சியில் திமுக எதையும் சாதிக்கவில்லை என விமர்சித்தார்.
இந்திய அரசில் குடியரசுத்தலைவர், பிரதமர் வரிசையில் 11ஆவது இடத்தில் இருப்பவர் மத்திய அமைச்சரவை செயலாளர். மத்திய அரசின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான இவர், பிரதமருக்கு நேரடி தகவல் தெரிவிப்பவராக இருப்பார். பிரதமருக்கும், மத்திய அமைச்சரவைக்கும் ஆலோசனைகள் வழங்கக்கூடியவர். மத்திய அமைச்சரவை செயலகத்தின் முதன்மை அதிகாரி. அரசுத்துறை செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களை பணியமர்த்துவதில் பரிந்துரைகள் வழங்குபவர்.
மாலத்தீவில் UPI அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான இந்த ஒப்பந்தம் மூலம், சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகளவில் 40% UPI பரிவர்த்தனை இந்தியாவில் நடைபெறுவதாக பெருமிதம் தெரிவித்த அவர், இது ஒரு டிஜிட்டல் புரட்சி என்றார். முன்னதாக, இலங்கை, மொரிஷியஸ் ஆகிய நாடுகளில் இந்த சேவை அறிமுகமானது.
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல சிறப்பான படங்களை இயக்கிய பாரதிராஜா, நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ள அவர், மலையாளத்தில் இதுவரை படம் இயக்கவோ, நடிக்கவோ இல்லை. இந்நிலையில், தற்போது மோகன்லால் நாயகனாக நடிக்கும் மலையாள படம் ஒன்றில், போலீஸ் அதிகாரி வேடத்தில் பாரதிராஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவை செயலாளராக தமிழகத்தை சேர்ந்த IAS அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 30 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அப்பதவியை அவர் வகிப்பார். 1987 பேட்ஜ் IAS அதிகாரியான இவர், கருணாநிதி முதல்வராக இருந்தபோது செயலாளராக பணியாற்றியவர். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த சோமநாதன், மத்திய அரசின் நிதித்துறை செயலராகவும் இருந்தவர்.
ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் வென்று, பதக்கம் கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா தோல்வி அடைந்தார். எனினும், அவருக்கு வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான மற்றொரு வாய்ப்பு உள்ளது. அதாவது, காலிறுதியில் அவரை வென்ற ஐபெரி கைஸி (கிர்கிஸ்தான்) இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், ‘Repechage’ சுற்றில் ரீத்திகா வென்றால் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுவார்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ₹38 கோடி TN அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 2022 டிசம்பர் – நடப்பாண்டு மார்ச் வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணப்பலன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்ததால், அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், சம்பவம் நடந்த உடனே கேரள CM உடன் பேசியதாகவும், NDRF, SDRF, ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உடனே செய்ததாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக கூறிய அவர், பணத்தால் எந்த பணிகளும் தடைப்படாது என உறுதி அளித்தார்.
வங்கதேச போராட்டக்காரர்களின் எச்சரிக்கையை தொடர்ந்து, அந்நாட்டின் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹாசன் பதவி விலகியுள்ளார். உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், இன்று பிற்பகலுக்குள் ராஜினாமா செய்ய கெடு விதித்திருந்தனர். இந்நிலையில், அவரது ராஜினாமா கடிதம் சட்ட அமைச்சகத்திற்கு வந்திருப்பதாகவும், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் எனவும், நாடாளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷிப் நஸ்ரூல் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.