India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் 18ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 3ஆம் தேதி அவரின் பிறந்தநாளில் ரூ.100 நாணயம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான பணிகள் முடிவடையாததால், அப்போது நாணயம் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி’ என்ற பெயருடன் நாணயம் வெளியாக உள்ளது.
இன்று (ஆகஸ்ட் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும். மேலும், குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்கள் அதிகமிருப்பதால் வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். குழந்தைகள் அதிகம் காய்கறிகளைச் சாப்பிடப் பழக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது தொடர்கதையாகி வருகிறது என்று விமர்சித்த அவர், இலங்கை அரசிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நிரந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலையில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான நிறைபுத்தரிசி பூஜை வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
இன்று (ஆகஸ்ட் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
▶ எந்த கட்சியிலும் சேர மாட்டேன்: பொன் மாணிக்கவேல்
▶ பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
▶ சீமானை மனிதராகவே கருதவில்லை: ஆர்.எஸ்.பாரதி
▶ ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு
▶ ‘கங்குவா’ டிரெய்லர் நாளை வெளியீடு
▶ என் இடத்தை வேறொருவர் நிரப்புவார்: ஸ்ரீஜேஷ்
இதய ஆரோக்கியத்தை பராமரிக்க மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அது மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் மன அழுத்தத்தை குறைக்க, தினமும் குறைந்தது 30 நிமிடம் காலையில் தியானம் செய்யலாம். உடற்பயிற்சி, முறையான தூக்கம், சரியான உணவு முறைகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாக்குதல் நீடித்துவரும் நிலையில், அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, திருத்தணி முருகன் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஆடி சஷ்டியை முன்னிட்டு கோயிலுக்கு சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியை தூக்கி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் ரோஜா. அவருடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.