India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமணஞ்சேரி திருத்தலம் திருமண தடைகளை நீக்க வல்லது. இந்த புனித தலத்தில் பூஜை செய்து வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த தலத்தில் வந்து திருக்குளத்தில் நீராடி ராகு பகவானை மனதார வழிபட விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
▶ ஜெயலலிதா குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் சர்ச்சை பேச்சு
▶ விஜய்யால் 2026இல் அரசியல் களம் மாறும்: அண்ணாமலை
▶ தமிழ்நாட்டில் 8 மாதங்களில் 656 கொலைகள் : உதயகுமார்
▶ ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது வழக்கு: அதிமுக கண்டனம்
▶ கேரளாவுக்கு தேவையான உதவி செய்யப்படும்: பிரதமர் மோடி
▶ RR பயிற்சியாளராகும் டிராவிட்?
நம் வாழ்வில் எல்லா தடங்கல்களையும் தாண்டி நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குலதெய்வ வழிபாடு இருக்க வேண்டும். ஒருவேளை தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அண்ணாமலையார், சிவன், பெருமாள் ஆகிய தெய்வங்களில் ஒன்றை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வணங்கினால் வாழ்வில் இன்பம் செழிக்கும் என்கிறார்கள் முன்னோர்கள்.
சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடினால், 24 மணி நேரத்தில் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவார் என மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தை விட, பாஜக தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் அல்ல என்று விமர்சித்த அவர், தலைவர்களை சிறையில் அடைத்து துன்புறுத்தும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பாஜகவின் உண்மையான B டீம் திமுக தான் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திராவிட கட்சிகள் பணம் வழங்காமல் கூட்டத்தை கூட்டினால், தான் கட்சியை கலைத்து விடுவதாக சவால் விட்ட அவர், அந்த திராணி திராவிட கட்சிகளுக்கு அறவே இல்லை என்று சாடினார். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை கவரவே தமிழ் புதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் திமுகவை விமர்சித்தார்.
WI-க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் SA அணி 154 முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் SA அணி 357 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்து களமிறங்கிய WI அணி 233 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியின் கீசி கார்டி 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் SA அணி, ஆட்ட நேர இறுதியில் 5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.
வினேஷ் போகத் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ராஜ்ய சபா உறுப்பினராக 30 வயது தேவை என்ற நிலையில், அவருக்கு ஆக.25 அன்று தான் 30 வயது ஆகிறது. தேர்தல் செப்.5இல் நடக்கும் நிலையில், வேட்பு மனுதாக்கல் செய்ய ஆக.21 கடைசி நாளாகும். ஹரியானாவில் இருந்து வினேஷ் போகத்தை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்., விரும்புவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்திருந்தார்.
▶ஆகஸ்ட் – 11 ▶ஆடி – 26
▶கிழமை: ஞாயிறு
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 03:15 PM – 04:15 PM
▶கெளரி நேரம்: 01:45 AM – 02:45 AM & 01:30 PM – 02:30PM
▶ராகு காலம்: 04:30 PM – 06:00 PM
▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM
▶குளிகை: 03:00 AM – 04:30 AM
▶திதி: ஸப்தமி
▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுப்போம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதில் அரசு எதையும் மறைக்க விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கித் தருவோம் என்றார். இதற்காக போராடும் மாணவர்கள் சிபிஐ விசாரணை கோரினாலும், அதற்கு ஆட்சேபனை இல்லை என்றார்.
நடிகர் தனுஷ் அனைவருக்கும் உதவி செய்யும் வேண்டும் என்ற எண்ணம் உடையவர் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர்கள் தனுஷ் மீது விதித்துள்ள நிபந்தனைகள் தேவையில்லாதது என்று கூறிய அவர், தனுஷ் இயக்கிய படம் நன்றாக ஓடிய காரணத்தால் அவருக்கு அழுத்தம் தரப்படுவதை ஏற்க முடியாது என்றார். தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் படம் நடிப்பதற்கு, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.