news

News August 11, 2024

செபி தலைவர் மீது Hindenburg பரபரப்பு குற்றச்சாட்டு

image

மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மதாபி புரி, கணவர் தவாலுக்கு பங்குகள் இருப்பதாக Hindenburg குற்றம்சாட்டியுள்ளது. Hindenburg அறிக்கையில், “அதானியின் பணமோசடி ஊழலுக்கு பயன்படுத்தப்பட்ட நிறுவனங்களில் புரி, தவால் பங்குகள் வைத்துள்ளனர். இதனாலேயே அதானி நிறுவன சந்தேக பங்குதாரர்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.

News August 11, 2024

Brazil: 62 பேரின் உடல்கள் மீட்பு

image

பிரேசிலில் விமான விபத்தில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளத்தை உறுதி செய்வதற்காக 34 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் என அனைவரின் உடல்களும், பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. Voepass நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 58 பயணிகள், 4 விமான ஊழியர்களுடன் சாவ் பாலோ நகரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, தரையில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்தனர்.

News August 11, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் (MET) கணித்துள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதையொட்டி, வீட்டை விட்டு வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை, ரெயின் கோட் எடுத்துச்செல்லவும்.

News August 11, 2024

PMAY திட்ட மானியம் ₹1.8 லட்சமாக குறைப்பு

image

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ( PMAY) வீட்டு கடனுக்கான மானியம் ₹1.8 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டு வருமானம் ₹18 லட்சம் வரை இருப்போருக்கு வீட்டுக் கடனுக்கு ₹2.3 லட்சம் வரை மானியம் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏழைகள், நடுத்தர, குறைவான ஊதியம் கொண்டோரை திட்ட பலன் சென்றடைவதை உறுதி செய்ய ஆண்டு வருமானம் ₹9 லட்சமாகவும், மானியம் ₹1.8 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

News August 11, 2024

தங்க நகைகளுக்கு மாற்றாக கலக்கும் நகைகள்

image

தங்கம், வெள்ளி நகைகளுக்கு மாற்றாக White Gold (தங்கம், நிக்கல், பல்லாடியம் அல்லது Zinc கலந்தது), Rose Gold (தங்கம், தாமிரம் கலந்தது) ஆகிய நகைகளை பெண்கள் தற்போது அணியத் தொடங்கியுள்ளனர். மேலும் Green Gold (தங்கம், வெள்ளி, தாமிரம்), Block Silver (ஆக்சிடைஸ் செய்த வெள்ளி), Argentium Silver (ஜெர்மானியம் சேர்ந்த வெள்ளி) ஆகிய நகைகள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

News August 11, 2024

டெங்கு பரவல் 30% அதிகரிப்பு

image

நாடு முழுவதும் டெங்கு பரவல் 25-30% அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நாட்டின் மற்ற பகுதிகளை விட தென் மாநிலங்கள், மத்திய மாநிலங்களில்தான் டெங்கு பரவல் அதிகம் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இன்னும் சில மாதங்களில் டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும். ஆதலால் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

News August 11, 2024

Olympics போட்டிகள் இன்றுடன் நிறைவு

image

ஜூலை 26ம் தேதி தொடங்கிய 2024 பாரிஸ் Olympics போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,717 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 1 வெள்ளி, 5 வெண்கலங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 71வது இடத்தில் உள்ளது. இப்போட்டியின் நிறைவு விழா இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. 2 பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர், ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி செல்கின்றனர்.

News August 11, 2024

3 நாட்களுக்கு Red Alert

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு வானிலை மையம் (MET) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று MET கூறியுள்ளது. கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

News August 11, 2024

Olympics: சீனா மீண்டும் முதலிடம்

image

Olympics பதக்கப்பட்டியலில் சீனா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. நேற்று அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2ஆவது இடத்திலும் இருந்தன. இன்று சீனா, அமெரிக்காவை பின்தள்ளி முதலிடம் வந்துள்ளது. சீனா 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 90 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. அமெரிக்கா 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என 122 பதக்கங்கள் வென்றுள்ளது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கல பதக்கத்துடன் 71வது இடம் வகிக்கிறது.

News August 11, 2024

நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கா?: அன்புமணி

image

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய அவரது மனைவி, குழந்தை உள்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது அதிகார அத்துமீறல் எனவும், இது காவல்துறையின் எந்திரத்தனமான செயல்பாட்டை காட்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வழக்கை திரும்பப் பெறவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!