India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக வளர்ச்சியை தடுக்கவே திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இருக்குமா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், DMK வோடு பல பிரச்னைகள், கோபம் இருக்கிறது என்று கூறினார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை ரகசியமாக சந்திக்கவில்லை, பாமகவோடு இணையும் திட்டமில்லை என்றும் வேல்முருகன் குறிப்பிட்டார்.
விஜய் டிவியில் பிக் பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ₹50 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸை முன்பு தொகுத்து வழங்கிய கமல், படங்களில் நடிக்க இருப்பதை சுட்டிக்காட்டி விலகினார். இதையடுத்து, கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். கமலுக்கு ₹120 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது.
விஜய் கட்சி குறித்த கேள்விக்கு No கமெண்ட்ஸ் என திமுக பதில் அளித்துள்ளது. விஜய் கட்சியின் மாநாட்டுக்கு இன்னும் காவல் துறை அனுமதி தரவில்லை. இதை சுட்டிக்காட்டி, விஜய் கட்சியை கண்டு திமுக பயப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், திமுக மூத்த தலைவர் RS பாரதி, No கமெண்ட்ஸ் என கூறியுள்ளார். எதிர்காலத்தில் பாஜகவோடு மீண்டும் திமுக கூட்டணி வைக்க சாத்தியம் இல்லை, இது சத்தியம் என்றும் தெரிவித்தார்
பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில், வாகனங்கள் ஓட்டும்போது கவனமாக இருப்பது அவசியமாகிறது. *வெளிச்சம் குறைவாக இருப்பதால் ஹெட்லைட் எரியவிட்டு வாகனம் ஓட்டினால், எதிரில் வருபவர் நம்மை அடையாளம் காண முடியும். *காரில் பயணிப்பவர்கள் வைப்பர் இயக்கத்தில் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ள வேண்டும். *சாலை வழுக்க வாய்ப்புள்ளதால், இயல்பை விட மழை காலத்தில் வேகம் குறைவாக பயணிக்க வேண்டும்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் (72) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் கஞ்சா மட்டுமின்றி, ஹெராயின் போன்ற சிந்தெடிக் போதைப்பொருட்களுக்கு அடிமையாக உள்ளதாக ஆளுநர் R.N.ரவி வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் எளிதாக கிடைக்கும் வகையில் உள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடி போதை வணிகம் நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மாணவர்களின் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி – வர்ஷினி ஜோடியின் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். சில நாள்களுக்கு முன் நண்பர்களுக்கு சிபி சக்ரவர்த்தி பேச்சுலர் பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், அவரது திருமணம் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, அட்லீ, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
போட்டியில் வென்று மைதானத்தில் இருக்கும் போது, நமது தேசிய கீதம் ஒலித்த தருணம் பெருமை மிக்கதாக இருந்ததாக, பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற ஹர்விந்தர் சிங் நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய கனவு நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாரா ஒலிம்பிக்ஸ் ஆடவர் வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார் ஹர்விந்தர் சிங்.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் COAL MINES PROVIDENT FUND நிறுவனத்தில் காலியாகவுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (செப்.6) கடைசி நாளாகும். ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் (10 இடங்கள்), சோஷியல் செக்யூரிட்டி உதவியாளர் (126) பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதற்கு CMPFO ஆள்சேர்ப்பு இணையதளத்தின் https://cmpfo.gov.in/இல் விண்ணப்பிக்கலாம்.
MBBS பாடத் திட்ட வழிகாட்டுதலை தேசிய மருத்துவ ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. போட்டியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த வழிகாட்டுதல்களுக்கு 3ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதின. இதன் எதிரொலியாக, அந்த வழிகாட்டுதலை திரும்ப பெறுவதாகவும், உடனடியாக ரத்து செய்வதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.