India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா 2ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியுள்ளது. INS அரிகாத் என்ற அந்த நீர்மூழ்கி, 6,000 டன் எடை கொண்டது. அதில் அணுஆயுத ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. 2018இல் கடற்படையில் சேர்க்கப்பட்ட INS அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுடன் விரைவில் இது இணையுமென கூறப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் 2 நீர்மூழ்கிகளை ₹40,000 கோடியில் கட்டும் திட்டம் கேபினட் குழு ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
‘KGF’, ‘லியோ’ படங்களில் வில்லனாக மிரட்டிய ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தென்னிந்திய படங்களில் வில்லனாக நடிக்கும் போது பல்வேறு விஷயங்களை ஆராய முடிவதாகத் தெரிவித்துள்ளார். தென்னிந்திய படங்களில் நடிப்பது தனக்கு சவாலாக இருப்பதாகவும், சரியான காதல் கதை அமைந்தால் காதல் படங்களில் கூட நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். ஆக.15ல் வெளியாக உள்ள ‘டபுள் ஐஸ்மார்ட்’ என்ற படத்தில் தற்போது இவர் நடித்துள்ளார்.
Hindenburg நிறுவன குற்றச்சாட்டைத் தொடர்ந்து, செபி தலைவர் மதாபி பதவி விலக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடந்து முடியும் வரை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டுமென கூறியுள்ளது. மதாபியும், கணவரும் நாட்டைவிட்டு தப்பாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவும் TMC கோரியுள்ளது.
காங்., மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சருமான நட்வர் சிங் (93), சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். ராஜஸ்தானில் 1931ஆம் ஆண்டு பிறந்த அவர், மத்திய அமைச்சர், இணை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது சேவைக்காக 1984ஆம் ஆண்டு ’பத்ம பூஷன்’ விருது வழங்கப்பட்டது. நட்வர் சிங் மறைவுக்கு PM மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Hindenburg குற்றச்சாட்டு குறித்து JPC விசாரணைக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய அக்கட்சி மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அதானியின் மெகா ஊழல் குறித்து JPC விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற தங்கள் கட்சியின் கோரிக்கையை இந்த குற்றச்சாட்டு வலுப்படுத்துவதாக கூறினார். செபி தலைவராக 2022இல் அவர் பதவியேற்றதும் அதானி 2 முறை சந்தித்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து 25,000 மருத்துவர்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23ல் நடக்க இருந்த இத்தேர்வு கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெட்ஃபிளிக்ஸ் OTTயில் இந்தாண்டு அதிகம் பார்க்கப்பட்ட 3ஆவது இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை ‘மகாராஜா’ படைத்துள்ளது. பாலிவுட் படங்களான ‘Crew’, 17.9 மில்லியன், ‘Laapataa Ladies’ 17.1 மில்லியன் Views-களுடன் முதலாவது மற்றும் 2ஆவது இடத்தில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து ‘மகாராஜா’ 15.5 மில்லியன் Views-களுடன் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindenburg குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் மதாபி புரி மறுத்துள்ளார். அவர் மீதும், கணவர் மீதும் Hindenburg குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதற்கு 2 பேரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களின் அறிக்கையில், அடிப்படை ஆதாரமற்ற அந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், அதில் எந்த உண்மையும் இல்லை. தங்கள் வாழ்க்கையும், நிதி பரிவர்த்தனையும் திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, பட்டியலில் திருத்தம் செய்வதற்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆக.20 முதல் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்துவார்கள். 2025 ஜன.1க்குள் 18 வயது நிறைவடைவோரும் இப்போது வாக்காளர்களாக பதிவு செய்யலாம். அக்.29க்குள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். நவ.28 வரை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.6ல் வெளியிடப்படும்.
எந்த விளையாட்டு போட்டியாக இருந்தாலும் சரி, கடுமையான நேரங்களிலும் வீரர்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் ஒரு அணியால் மேம்பட முடியும் எனவும் சிறந்த திறனை வெளிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் Spain அணியை வீழ்த்தி இந்திய அணி வெண்கலம் வென்றது.
Sorry, no posts matched your criteria.