India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் விஜய் பிரம்மாண்ட மாநாடு நடத்தி, அதில் தனது கட்சி கொடி, சின்னம், கொள்கைகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக திருச்சியில் தீவிரமாக இடம் பார்த்து வரும் அவருக்கு, இடம் கிடைக்கவிடாமல் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து பேசிய சீமான், விஜய் மாநாட்டிற்கு இடம் கிடைக்கவில்லை என்றும், தனக்கும் இதே பிரச்னை ஏற்பட்டதாக இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தால் ஆதாரமற்றவை என நிரூபிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்ட கூற்றுக்களை மறுசுழற்சி செய்து ஹிண்டன்பெர்க் தற்போது ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளதாக அதானி குழுமம் விமர்சித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், தனிப்பட்ட லாபத்தை மட்டும் நோக்கமாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ளது. மேலும், தங்களது வெளிநாடு முதலீடு சார்ந்த தகவல்கள் வெளிப்படத்தன்மையுடன் இருப்பதாக கூறியுள்ளது.
பாஜகவின் பைக் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அண்ணாமலை ஆவேசமாகப் பேசினார். இதுகுறித்து பேசிய அவர், “சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுமாறு பிரதமர் கூறியிருக்கிறார். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தேசியக் கொடியுடன் பைக் பேரணி நடத்த திட்டமிட்டோம். ஆனால், தேசியக் கொடியை பிடிக்காததால் இப்பேரணிக்கு திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
தெலங்கானாவில் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை அருகே நேற்று தெரு நாய்கள், பொருள் ஒன்றை கடித்து குதறிக் கொண்டிருந்தன. இதனைக் கண்ட காவலர், நாய்களை விரட்டிவிட்டு பார்த்த போது அது பச்சிளம் குழந்தை என தெரியவந்தது. குழந்தை உடலின் கீழ் பகுதி இல்லாததால் அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என தெரியவில்லை. குழந்தையை அங்கு போட்டு சென்றது யார் என விசாரணை நடந்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்காக நடிகர் தனுஷ் ₹25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நிலச்சரிவில் இருந்து மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினருக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து, அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
ஆணவக் கொலைக்கு ஆதரவான கருத்துகளை பரப்புவது கவலையளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆணவக் கொலையை குற்றமில்லை எனச் சொல்வது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும் என்று சாடிய அவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வைத்து அரசியல் நகர்வுகளை நடத்த தங்களுக்கு விருப்பமில்லை என்றும் கூறியுள்ளார். முன்னதாக, ஆணவக்கொலை என்பது வன்முறையோ, கலவரமோ அல்ல என்று நடிகர் ரஞ்சித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டூத் பேஸ்டை மாமியார் எடுத்ததால் ஆத்திரமடைந்து இத்தாலியில் சுற்றுலா சென்ற இடத்தில் குடும்பத்தை விட்டுவிட்டு மருமகன் சொந்த ஊர் திரும்பிய வினோதம் நடைபெற்றுள்ளது. யார் என அடையாளம் தெரியப்படாத அவர், இணையதளத்தில் வெளியிட்ட பதிவில், மனைவி, மகள், மாமியாருடன் வெனீஸ் சுற்றுலா சென்றதாகவும், அங்கு தனது டூத் பேஸ்டை மாமியார் பயன்படுத்தியதால், அனைவரையும் விட்டுவிட்டு ஊர் திரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் வெளியாகியுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக படம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய ரஞ்சித், குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக நல்ல படம் எடுத்திருக்கிறேன். யாரும் எனக்கு ஆதரவு தரவில்லை. என்னை பற்றி தவறாகவும் சித்தரிக்கிறார்கள். தயவுசெய்து அப்படி செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்.
அழகாக இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் இருந்து திரும்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் பராகுவே வீராங்கனை லூவானா அலான்சோ, பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் தனக்கு நேரடி குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறியுள்ளார். வானொலி பேட்டியில், இத்தகவலை வெளியிட்ட அவர், மற்ற தகவலை கூறவில்லை. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து திரும்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுவதையும் அலொன்சோ மறுத்துள்ளார்.
வீட்டு உரிமைத்தை பாதுகாக்க, ‘வாடகை ஒப்பந்தத்தை’ விட, ‘லீஸ் மற்றும் லைசென்ஸ்’ ஆவணம் சிறந்ததாக உள்ளது. இதில், குத்தகைதாரருக்கு சொத்தின் மீது எவ்வித உரிமையும் கிடைக்காத வகையில் கடுமையான விதிகள் உள்ளன. வாடகை ஒப்பந்தத்தில் இருந்து சில ஷரத்துகள் மட்டுமே இதில் மாற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணத்தை நோட்டரி மூலம் முத்திரை தாளில் மட்டுமே பெற முடியும். இதன் ஆயுட்காலம் 10 நாள்கள் முதல் 12 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
Sorry, no posts matched your criteria.