India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகரான நாகார்ஜூனாவை படக் குழுவினர் அணுகியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்களிடம், தெலுங்கில் தற்போது கதாநாயகனாக தாம் நடிக்கும் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், ஆதலால் வில்லனாக நடித்து மார்க்கெட்டை கெடுக்க விரும்பவில்லை எனக் கூறி மறுத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், இதனால் நடப்பதற்கே சிரமப்படுகிறார் என்றும் கூறப்பட்டு வந்தது. அந்த பேச்சுக்கு கருணாநிதி நினைவு நாளன்று முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்தார். கருணாநிதி நினைவுநாளையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அவர் படத்துக்கு முதலில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து மெரினாவுக்கு நடந்து சென்று கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தபால்துறையில் RD திட்டத்தின் கீழ் மாதம் ₹100 முதல் முதலீடு செய்யலாம். கூட்டு வட்டியின் நன்மையும் இத்திட்டத்தில் கிடைக்கிறது. முதலீட்டைப் பொறுத்து லாபக் கணக்குகள் மாறுபடுகிறது. உதாரணமாக மாதம் ₹7,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் முதலீடாக ₹4,20,000 இருக்கும். வட்டி 6.7%ஐ சேர்த்தால் முதிர்வு காலத்தில் ₹4,99,564 கிடைக்கும். அதை அப்படியே மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தால் ₹11,95,982 கிடைக்கும்.
சிம்புவின் 48ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்தப்படம் எடுக்கப்படவில்லை. சுமார் ஓராண்டுக்கும் மேல் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் படத்தை தானே தயாரித்து, நடிக்க சிம்பு முடிவெடுத்து இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET கணித்துள்ளது. அத்துடன், தருமபுரி, ராணிப்பேட்டை, காஞ்சி, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நாளையும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, கொலை செய்த வழக்கில், சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் நடந்த இடத்தில் Bluetooth Headphone தவற விட்டுச் சென்றதே குற்றவாளிக்கு எதிரான ஆதாரமாக மாறியுள்ளது. Headphone, CCTV ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இது குறித்த விரிவான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளதாரர் வங்கிகளில் வீட்டுக் கடன் பெறுவது குறித்து தெரிந்து கொள்வோம். மாத சம்பளத்துக்கு ஏற்ப வங்கிகள், வீட்டுக் கடன் வழங்கும். உதாரணமாக மாத சம்பளம் ₹50,000, நீங்கள் வாங்கும் வீட்டின் மதிப்பு ₹40 லட்சம் எனில், ₹37 லட்சம் வீட்டுக்கடன் கிடைக்கும். இதுபோல மாத சம்பளம் மற்றும் வீட்டின் மதிப்பிற்கேற்ப வங்கிகள் லோன் தொகையை முடிவு செய்து, கால வரம்பை நிர்ணயித்து உங்களுக்கு கடன் வழங்கும்.
வீட்டுக் கடனுக்கு FLOATING, FIXED என 2 வகை வட்டி நிர்ணயித்து வங்கிகள் கடனை வசூலிக்கும். இதில் எந்த வட்டி உங்களுக்கு உகந்தது என்பதை தேர்வு செய்து லோன் வாங்கலாம். உங்கள் பெயரில் லோன் வாங்க, உங்களது 6 மாத வருமான சான்று, வங்கி பரிவர்த்தனை, ஆதார், பான், குடியிருப்பு சான்று, சாட்சி சான்று நகல், புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்கலாம். மனைவி பெயரையும் சேர்க்க, அவரது சான்று, புகைப்படம் இணைப்பது அவசியம்.
வீட்டுக் கடன் 20- 30 ஆண்டு வரை வழங்கப்படும். லோன் வாங்குவோர் வயது, செலுத்தும் திறனை அடிப்படையாக வைத்து இதுகுறித்து வங்கிகள் முடிவெடுக்கும். வருமானம் அதிகமாக இருப்பின் வீட்டிற்கான மொத்த மதிப்பையும் வங்கிகளே லோனாக அளிக்கும். வீட்டு லோனை வாங்கிய பிறகு, கைகளில் போதிய பணம் இருப்பின் அதை முன்கூட்டியே அடைக்கலாம். இதனால் 20-30 ஆண்டு காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் தேவையில்லை.
தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ₹100 கோடிக்கும் மேல் வசூலைக் குவித்த படம் மகாராஜா. அந்தப் படத்தை அமீர்கான், இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியபடி இருந்தது. இத்தகவலை அமீர்கான் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். மகாராஜா படத்தின் கதை பிடித்திருப்பதாகவும், அந்தப் படத்தை வாங்கி, இந்தியில் தயாரித்து தாமே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.