India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கு தயாராக, கல்வி டிவியில் நாளை முதல் 16ம் தேதி வரை காலை 7-9 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. TNPSC, SSC, ரயில்வே, வங்கி மற்றும் ஆசிரியர் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், Youtube தளத்தில் உள்ள Tn Careers Employment என்ற சேனலிலும் பயிற்சி வகுப்பை காணலாம் என கூறப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நிரப்பப்பட உள்ள 17,727 Combined Graduation Level Examination (CGL) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த மாதம் 27ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்தது. இதில், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள இன்றே (ஆக.11) கடைசி நாளாகும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உடனடியாக திருத்தம் மேற்கொள்ளலாம்.
மகள் சுப்புலட்சுமியை ஹீரோயினாக்க திட்டமிட்டு கவுதமி கதை கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ’குரு சிஷ்யன்’ படத்தில் அறிமுகமாகி பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ள கவுதமி, திருமணத்திற்கு பிறகு திரைப்படத் துறையிலிருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது அவர் மீண்டும் கேரக்டர் ரோல்களில் நடிக்கிறார். இதையடுத்து, நடிப்பு பயிற்சி முடித்த மகளை ஹீரோயினாக்க சில இயக்குனர்களிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங், ஹரியானா அரசு வழங்கிய விளையாட்டுத் துறை துணை இயக்குநர் பணியை நிராகரித்துள்ளார். அரசுப் பணியை ஏற்க குடும்பத்தினர் வலியுறுத்தியும், துப்பாக்கிச் சுடுதலில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த பணியை செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆன்லைனில் தங்கம் விலை குறைவாகக் கிடைக்கும் என விளம்பரம் செய்து, தொழிலதிபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. சென்னையை சேர்ந்த தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் தருவதாகக் கூறி ஆளில்லா இடத்திற்கு வரவழைத்த அக்கும்பல், அவரிடம் இருந்த பணத்தை பறித்து சென்றுள்ளது. தமிழகம் முழுவதும் இதேபோல் பல கும்பல்கள் வலம் வருவதால் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மறைந்த முன்னாள் CM ஜெயலலிதா குறித்து பேச அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தகுதியில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மறைந்தவர்கள் குறித்து கொச்சையாக விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும், உலகம் போற்றும் தலைவரை சிறுமைப்படுத்த, நாகூசும் வகையில் அமைச்சர் பேசியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். நடிகர்கள் முதல்வராவது MGR, ஜெயலலிதாவோடு முடிந்தது என அமைச்சர் பேசி இருந்தார்.
PMAY திட்டத்தில் விதிமீறல்களை தடுக்க மானிய விதியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக ₹35 லட்சத்துக்கு வாங்கப்படும் வீடுக்கு அளிக்கப்படும் ₹25 லட்சம் கடனிற்கான வட்டியில் 4% தள்ளுபடி அளிக்கப்படும். முதலில் 12 ஆண்டுகளுக்கு வங்கிகளால் திருப்பி வசூலிக்கப்படும் ₹8 லட்சம் கடனுக்கு இந்த வரித் தள்ளுபடி வழங்கப்படும். இது 5 ஆண்டுத் தவணைகளாக வரவு வைக்கப்படும்.
புத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. நாளை அதிகாலை 5.45 முதல் 6.30 வரை அறுவடை செய்த நெற்கதிர்களால் நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை நடைபெறும். ஐயப்பனுக்கு படைத்து பூஜை செய்யப்பட்ட அந்த நெற்கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து, நாளை இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். பிறகு ஆவணி மாத பூஜைக்காக மீண்டும் ஆக.16ல் கோயில் நடை திறக்கப்படும்.
அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி அளிக்கும் தமிழப் புதல்வன் திட்டத்தை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தமிழ்ப் புதல்வன் எல்லாம் ஒரு திட்டமா? இளைஞர்களின் ஓட்டுக்காக ஆண்டுக்கு ரூ.12,000 கொடுக்கிறீர்கள். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் உள்ள இளைஞர்கள்தான் அடுத்த தேர்தலில் காஸ்ட்லியான வாக்காளர்கள்” எனத் தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு நிதி வழங்குவதில் ஆந்திராவை பார்த்து தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகை குறைவு என்றாலும், தமிழகத்தை விட 6 மடங்கு தொகை அதிகமாக ஆந்திராவில் வழங்கப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக காத்திருக்கும் 80 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் எப்போது வழங்கப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.