India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘பிக்பாஸ்’ 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகிய நிலையில் அடுத்து யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. தற்போது நயன்தாரா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் மீட்புப் பணிகளுக்காக பலரும் நிதியுதவி வழங்கிவரும் நிலையில், தமிழக இளம் செஸ் வீரர் குகேஷ் ₹10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். அவரது உதவும் குணத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு கிரெடிட் கார்டை உபயோகிக்கும் போதும் சில பயன்களை பெறலாம். உங்களிடம் அதிக கார்டுகள் இருந்தால், ஷாப்பிங், விமான நிலைய லவுஞ்ச் அணுகல் மற்றும் ரீசார்ஜ்கள் ஆகியவற்றில் தள்ளுபடிகளைப் பெறலாம். பல கார்டுகளைப் பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அதிக முறை கார்டுகளை பயன்படுத்துவதால் கடனில் சிக்கும் வாய்ப்பும் அதிகம். எனவே கவனமாக பயன்படுத்துங்கள்.
வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டங்கள், கலவரங்கள் ஆகியவற்றில் அமெரிக்க நாட்டின் சதி இருப்பதாக அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார். வங்காள விரிகுடா பகுதியில் தனது நாட்டு ஆதிக்கத்தை நிலைநாட்டவே அமெரிக்க இப்படி செய்வதாக கூறிய அவர், கலவரத்தால் தினமும் நடைபெறும் மரணங்களை காண முடியாமல் ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.
குடும்பத்தில் திருமணம், கிரஹப்பிரவேசம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு முன் அம்மன் சன்னதி முன் மாவிளக்கு போடுவது மரபு. இவ்வாறு செய்வதால், நிகழ்ச்சிகள் தடங்கலின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் மற்றும் வாசனைப் பொருட்கள் சேர்த்து, அதில் நெய் விட்டு மாவாக பிசைந்து வாழை இலையில் தட்டி, அதில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவதே மாவிளக்கு எனப்படுகிறது.
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு, நாளை முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 19 முதல் 23 வரை நடைபெறவுள்ள பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், நாளை முதல் <
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடுமுழுவதும் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 10 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆக.14ஆம் தேதி கடைசி நாளாகும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் <
‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்துடன் நடிப்பதற்கு முந்தைய நாள், தனக்கு காய்ச்சல் வருவது போல் ஆகிவிட்டதாக நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். அவருடன் நடித்தது கனவு மாதிரி இருந்ததாகவும், ஃபகத் ஃபாசில் போன்ற சிறந்த நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தில் துஷாரா தற்போது நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“நடிகர்களுக்கு அறிவு இருக்காது. அவர்களால் ஆட்சி செய்ய முடியாது” என அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. நடிகர் விஜய்யை தான் அன்பரசன் இவ்வாறு விமர்சித்ததாக பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து பேசிய சீமான், விஜய்யை குறிப்பிட்டுதான் அன்பரசன் பேசினார் என்று நீங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் உதயநிதியை கூட அப்படி கூறியிருக்கலாம் இல்லையா? என கிண்டலாக கூறினார்.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.