news

News August 11, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News August 11, 2024

₹2000 கோடியுடன் மாயமான திருடன்

image

ஜூலை மாதம் இந்தியாவில் நடைபெற்ற க்ரிப்டோ கரன்சி திருட்டு, இந்தியாவின் மிகப்பெரிய திருட்டுக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. WazirX என்ற நிறுவனத்தின் Walletஇல் வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்கள் பலரின் க்ரிப்டோ கரன்சிகளை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். அதன் மதிப்பு சுமார் ₹2,000 கோடியாகும். ஒரு மாதம் ஆகியும் திருடியவர் யார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

News August 11, 2024

நாளை மதியம் 1 மணிக்கு ‘கங்குவா’ டிரெய்லர்

image

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘கங்குவா’. இப்படத்தின் டிரெய்லர் நாளை (ஆக.12) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பிற்பகல் 1 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்.10 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. யாரெல்லாம் இப்படத்திற்கு வெயிட்டிங்?

News August 11, 2024

சமூக வலைதளங்களுக்கு எதிராக வழக்கு

image

YouTube, Instagram, Facebook உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அதீத அடிமை பழக்கத்தை தூண்டுவதாக கனடாவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சமூக வலைதளங்களை தான் உபயோகித்து வருவதாகவும், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தி மனரீதியான எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 11, 2024

இது தேசத்தை பற்றியது அல்ல: மஹுவா மொய்த்ரா

image

செபி அமைப்பின் மீது ஹிண்டன்பெர்க் கூறியிருக்கும் குற்றச்சாட்டு தேசத்தின் மீதானது அல்ல என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா காட்டமாக கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டால், ஹிண்டென்பெர்க் தேசத்தை அவமதிப்பதாக பாஜகவினர் குரல் எழுப்பி வருகின்றனர். அதற்கு, X பதிவின் மூலம் பதிலளித்திருக்கும் மொய்த்ரா, குற்றம்சாட்டப்பட்டவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News August 11, 2024

ஆகஸ்ட் 22 முதல் கலைத் திருவிழா

image

அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 22 முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 1-2, 3-5, 6-8, 9-10, 11-12ஆம் வகுப்பு மாணவர்கள் என 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆக.22-30 வரை ‘சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், பேச்சு, ஓவியம், நடனம், மிமிக்ரி என பல்வகை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

News August 11, 2024

தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்னை இல்லை: நாசர்

image

நடிகர்கள் விஷால்,தனுஷை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சங்கம், இன்று தனது செயற்குழுக் கூட்டத்தை கூட்டியது. கூட்டத்திற்கு பிறகு பேசிய நடிகர் சங்கத் தலைவர் நாசர், “தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம். படப்பிடிப்புகளுக்கு தடங்கல் வரக்கூடாது என்பதே எங்கள் நோக்கம்” எனக் கூறினார்.

News August 11, 2024

அதானி குழுமத்தில் முதலீடு செய்யவில்லை: மாதவி புச்

image

செபி நிறுவனத் தலைவர் மாதவி புச் மற்றும் அவரது கணவர் இருவரும் வெளிநாடுகளில் அதானி குழுமத்தில் முதலீடு செய்திருப்பதாக ஹிண்டென்பெர்க் வெளியிட்டிருந்த தகவலை அவர்கள் இருவரும் மறுத்துள்ளனர். இதுகுறித்த அறிக்கையில், ஹிண்டன்பர்க் தெரிவித்திருக்கும் தகவல்கள் பல உண்மைதான் என்றும், அவை விதிமீறல் இல்லை என்றும் மாதவி குறிப்பிட்டுள்ளார். செபி ஏற்கெனவே ஹிண்டென்பெர்க் நிறுவனத்திற்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.

News August 11, 2024

வருங்கால துணை முதல்வர் உதயநிதி: கீதா ஜீவன்

image

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படவுள்ளதாக கடந்த மாதம் முதல் தகவல் பரவி வருகிறது. ஆனால், உதயநிதி இதனை மறுத்தார். அதே சமயத்தில், வரும் 19-ம் தேதிக்கு பிறகு அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சர் கீதாஜீவன் இன்று ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், உதயநிதியை வருங்கால துணை முதல்வர் எனக் குறிப்பிட்டார்.

News August 11, 2024

’வெடிகுண்டு இருக்கிறதா’ என்று கேட்டவர் கைது

image

கொச்சி விமான நிலையத்தில் சோதனை செய்யும் அதிகாரியிடம் “என் பையில் வெடிகுண்டா இருக்கிறது?” என்று கோபமாக கேட்டவர் கைது செய்யப்பட்டார். கொச்சியில் இருந்து சொந்த ஊரான மும்பை செல்வதற்காக மனோஜ்குமார் என்பவர் விமான நிலையம் வந்தார். அப்போது, அங்கிருந்த CRPF அதிகாரிகள் அவரது பையை சோதனை செய்தபோது மனோஜ் ஆத்திரத்தில் கத்தினார். இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை கைது செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!