India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முட்டை விலை 10 காசுகள் உயர்ந்துள்ளதாக, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. முட்டை விலை சமீப நாள்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், முட்டை விலை இன்று 10 காசுகள் உயர்ந்து ₹4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விலையில் ஒரு முட்டை ₹6க்கு விற்கப்படுகிறது. ஆடி மாதம் முடிய உள்ளதால் வரும் நாள்களில் முட்டை விலை கணிசமாக உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ ஆக.15-ல் வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தை புரமோஷன் செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இப்படத்தின் 2 பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாடல் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், ஓடும் ரயிலிலிருந்து பயணிகள் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பில்பூர் அருகே சென்ற ஹவுரா-அமிர்தசரஸ் மெயிலின் ஜெனரல் கோச்சில் பயணித்த சிலர், தீத்தடுப்பு கருவியை உபயோகித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட புகைமூட்டத்தை, ரயிலில் தீப்பற்றியதாக நினைத்த சிலர் திடீரென குதித்துள்ளனர். இதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
UPI மூலம் வேறு ஒருவருக்கு தவறாக பணம் அனுப்பிவிட்டால், Paytm (அ) GPay சாட் மூலம் அவரை தொடர்பு கொண்டு பணத்தை பெறலாம். அல்லது UPI வாடிக்கையாளர் மையத்தை தொடர்புகொண்டு 24-48 மணி நேரத்தில் பணத்தை திரும்ப பெறலாம். அதில் தீர்வு ஏற்படாவிட்டால், அருகிலுள்ள வங்கி கிளையை தொடர்புகொண்டு 45 நாள்களில் பணத்தை திரும்ப பெறலாம். அப்போதும் பணம் கிடைக்காவிட்டால் NPCI தளத்தில் புகார் அளிக்கலாம்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீட்டில் இருந்து திருடப்பட்ட பூனை ₹28,570க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த வங்கதேச சிறப்பு பாதுகாப்புப் படையினர் பூனையை மீட்டுள்ளனர். பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஷேக் ஹசீனா கடந்த வாரம் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அவர் வீட்டிற்குள் புகுந்த வன்முறையாளர்கள் வீட்டிலிருந்த பொருள்களை திருடிச் சென்றனர்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள நட்வர் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பணியாற்றியவர். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, நாட்டின் வெளியுறவுத் துறையை திறம்பட கையாண்டவர். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.
அதிக மகசூல், பருவநிலையை தாக்குப்பிடிக்கும் மற்றும் உயிரி செறிவூட்டப்பட்ட 109 பயிர் ரகங்களை இன்று பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். டெல்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் இன்று புதிய வேளாண் பயிர்கள் குறித்து பிரதமர் மோடி ஆலோசித்தார். அப்போது சுற்றுசூழலுக்கு நன்மை பயக்கும் இந்த புதிய பயிர் வகைகளை உருவாக்கியதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ள ரெஜினாவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மகிழ்திருமேனி இயக்கிவரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் ஆகியோரின் போஸ்டர்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் தற்போது ரெஜினா நடந்துவருவது போன்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக அரசியல் தலைவர்களை சீமான் ஒருமையில் விமர்சித்து வருவது குறித்து, அவரிடம் செய்தியாளர்கள் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “என்னை பற்றி திமுக தலைவர்கள் எப்படி பேசுகிறார்கள்? அவர்களுக்கு புரிகின்ற மொழியில்தான் நான் பேச முடியும். வாங்க சீமான் என்று கூறினால், நானும் “வாங்க” என்று சொல்வேன். வாடா என்று சொன்னால், என்னடா என்றுதான் நான் கேட்பேன்” எனக் கூறினார்.
அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், குறிப்பிட்ட மதத்தினரை நியமிக்கும் நடைமுறை அரசியலமைப்புக்கு எதிரானது என கருத்து தெரிவித்த கோர்ட், அரசு கருவூலத்தில் இருந்து சம்பளம் வழங்கும்பட்சத்தில், தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.