India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மதுரை, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழையும், சென்னை உள்பட 6 மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே, திருச்சி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்க தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்பொழுது, துணை முதல்வராக பதவி வகிக்க அவருக்கு அனைத்து விதமான தகுதியும் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக, உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஹோமோ சேபியன்ஸ் என்ற ‘நாம்’ பரிணமிப்பதற்கு முன்பு, பூமியில் ஹோமோ நியாண்டர்தாலன்சிஸ், ஹோமோ எரக்டஸ் உள்ளிட்ட 8 மனித இனங்கள் வாழ்ந்திருக்கின்றன. குறிப்பாக நியாண்டர்தால் வகையை சேர்ந்த மனித இனம், நமது சேபியன்ஸ் இனத்திற்கு மிகவும் நெருங்கிய குணாதிசயங்களை கொண்டு இருந்திருக்கிறது. இந்த இனத்துடன் நமது இனம் சேர்ந்ததில், இன்று வரை சேபியன்ஸ் மனிதர்களின் DNAவில் சிறிதளவு நியாண்டர்தால் எச்சங்களும் இருக்கின்றன.
தமிழகத்திலுள்ள 37,061 அரசுப் பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மைக் குழுவை (SMC) மறுகட்டமைப்பு செய்வதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று, 12,117 அரசு தொடக்கப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆக.17, 24, 31இல் மீதமுள்ள பள்ளிகளில் மறு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக, பெற்றோர் உள்ளிட்டோர் அடங்கியது பள்ளி மேலாண்மைக் குழு.
முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். அவர் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு, X தளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, யாருடைய வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு, “பி.டி.உஷா” என்று மாளவிகா பதிலளித்தார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களை மீட்டெடுப்பதற்காக அண்டை மாநிலங்களும், பல்வேறு தரப்பினரும் கேரளாவிற்கு நிவாரணம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் SNJ நிறுவனம் வயநாடு மக்களுக்கு உதவும் விதமாக 1 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இதற்காக ₹1 கோடிக்கான காசோலையை அந்நிறுவனம் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் நேரில் வழங்கினர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அரசு வங்கிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் IBPS அமைப்பு, 896 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளது. இதற்கு கல்வித்தகுதி, பி.இ, பி.டெக்., எல்.எல்.பி., எம்பிஏ, இளங்கலை பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு 20-30 வரை ஆகும். முதல்நிலைத் தேர்வு உள்பட 3 கட்ட தேர்வு நடத்தப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
உலக மகளிர் கபடி தொடர், முதல் முறையாக இந்தியாவில் நடைபெற உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் கபடியும் ஒன்று. இந்த நிலையில், கபடியை பிரபலப்படுத்தும் நோக்கில், அடுத்த மாதம் ஹரியானாவில் உலக மகளிர் கபடி தொடர் நடத்தப்பட உள்ளது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர். கபடிக்காக உலக அளவில் ஒரு தொடர் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 19 நாள்களாக நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா முடிவடைந்துள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் நாடுகள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. ஒரு தங்கப்பதக்கத்துடன் பாகிஸ்தான் 62ஆவது இடத்தையும், ஒரு வெள்ளி 5 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 71ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
விழுப்புரத்தில் மின்னல் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவி பார்வையை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமாரின் மகள் சன்மதி நேற்றிரவு தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதை பார்த்துள்ளார். அதில் ஏற்பட்ட அதீத வெளிச்சம் காரணமாக சிறுமியின் கண்பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மங்களாகத் தொடங்கியிருக்கிறது. தற்போது அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.