India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்கு Hindus for America First அமைப்பு ஆதரவளித்துள்ளது. அவ்வமைப்பின் நிறுவனர் உத்சவ் சந்துஜா, பைடன் ஆட்சியில், USAஇல் எல்லைப் பிரச்னைகளைத் தீர்க்க முடியாததால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வென்றால், இந்திய -அமெரிக்க உறவில் சிக்கலை ஏற்படலாம். எனவே ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் எதிராக பிரசாரம் செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கெட்கர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்கள் வாயிலாக OBC & மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளைப் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பணியாளர் & பயிற்சி துறை மேற்கொண்ட விசாரணையில் குற்றச்சாட்டு உண்மையென நிரூபணமானது. இதன் அடிப்படையில், பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை கூறியது, மாற்றுத்திறனாளிகளை அவமதித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் இன்று கைது செய்யப்பட்டார். 5 பிரிவுகளில் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள 190 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ளது. Technician, Loco Pilot உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10 & 12, Diploma, ITI (NCVT/SCVT). வயது வரம்பு: 18-36. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.,6. தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவல்களுக்கு <
உலகளவில் ஸ்மார்ட் போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தின் IPhone முதலிடத்தில் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15, 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் உலக சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் IPhone 25% பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. தென்கொரியாவின் சாம்சங் 21% பங்களிப்புடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
பாராலிம்பிக்ஸ் ஓட்டப்பந்தயத்தில் பார்வை குறைபாடுடைய வீரர்கள் எவ்வாறு போட்டியிடுகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழும். மாற்றுத்திறனாளி தடகள வீரர்கள் ஒரு வழிகாட்டியின் துணையுடன் ஓடுகளத்தில் போட்டியிடுவர். அவர்கள் விளையாட்டு வீரர்களை தள்ளவோ அல்லது இழுக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன் தயாரிப்பில் இருந்து தொடங்கி இறுதிவரை உடனிருக்கும் வழிகாட்டியும் வீரருடன் மேடையில் பதக்கங்களைப் பெறுவர்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்திற்கு 6 மாதங்கள் கழித்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணிக்கப்படும். இனி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், மூட நம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
பள்ளி நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் குழு அமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சியை தீவிரமாக கண்காணிக்கப்படும். இனி பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், மூட நம்பிக்கையை பரப்பும் வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.