India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனது போன் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளதாக என்சிபி எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தனக்கு யாரும் போன் செய்யவோ, வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பவோ வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், இந்த சம்பவம் தொடர்பாக புனே போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
1.தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள். 11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள், 13. பிறர்மனை விரும்புகிறவர்கள், 14 ஆணவம் கொண்டவர்கள்.
இந்திய அணி சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் எந்த சிரமத்தையும் சந்திக்கவில்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். முன்னணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாடினால், சுழற்பந்து வீச்சை மேலும் எளிதாக சமாளிக்கலாம் என்றார். இலங்கை மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ப முற்றிலும் தயாரிக்கப்பட்டதே, இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தாா்.
SA – WI இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆனது. இதில் டாஸ் வென்ற SA அணி, முதல் இன்னிங்சில் 357 ரன்னும், WI அணி 233 ரன்னும் எடுத்தன. இதையடுத்து 124 ரன்கள் முன்னிலையுடன் தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கிய SA அணி, 173/3 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து WI அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 201/ 5 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது.
நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் வறுமை நீங்கி, விவசாயம் செழிப்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இவ்வருட நிறை புத்தரிசி பூஜை இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது.
▶ஆகஸ்ட் – 12 ▶ஆடி – 27
▶கிழமை: திங்கள்
▶நல்ல நேரம்: 06:15 AM – 07:15 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நேரம்: 09:15 AM – 10:15 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM
▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM
▶குளிகை: 03:00 AM – 04:30 AM
▶திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்த அமைச்சர் தா.மோ. அன்பரசனின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நாஞ்சில் மனோகரன் எழுதிய “கருவின் குற்றம்” கவிதை குறித்தும், கவிஞர் கண்ணதாசன் எழுதிய “வனவாசம்” குறித்தும் பேச ஆரம்பித்தால், திமுகவினர் ஒருவர் கூட வெளியில் தலைகாட்ட முடியாது எனவும் சாடியுள்ளார். தா.மோ. அன்பரசனின் பேச்சுக்கு அதிமுகவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் படுகாயம் அடைந்துள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த செஸ்னா-152 ரக பயிற்சி விமானம், சோதனை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ம.பி-க்கு கொண்டு செல்லப்பட்டது. பழுது பார்க்கும் பணிகளுக்கு பிறகு, 40 நிமிடங்கள் விமானம் வானில் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
சர்வதேச கிரிக்கெட்டில் தான் எதிர்கொண்ட சிறந்த பந்துவீச்சாளர்கள் யார் என்பது குறித்து வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அவர், SA அணியின் டேல் ஸ்டெய்ன் மற்றும் AUS சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆகிய இருவரும் தான் எதிர்கொண்டதில் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் என்று தெரிவித்துள்ளார். வாசிம் ஜாபர் 2010இல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரளா வதந்திகளை பரப்பி வருவதாக ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். கேரளாவில் இயற்கை சீற்றம் ஏற்படும் போதெல்லாம் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தேவையற்ற வதந்திகளை அம்மாநில அரசியல் கட்சிகள் செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு முல்லை பெரியாறு அணையை தண்ணீர் வெடிகுண்டு என கேரள காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்தது.
Sorry, no posts matched your criteria.