India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதமடித்தவர் டெண்டுல்கர் என்பது தெரிந்திருக்கும். ஆனால் முதன்முதலில் இந்தியாவுக்காக சதமடித்த வீரர் தெரியுமா என்றால் கேள்விக்குறிதான். பஞ்சாப்பை சேர்ந்த லாலா அமர்நாத்தே அந்த வீரர். 1933ஆம் ஆண்டு முதன்முதலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக அவர் 118 ரன்கள் குவித்தார். அப்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிடையாது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் இன்று மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளையும் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
சென்னையில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழியிடம், நடிகர் விஜய் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் குடும்பத்தோடு சிறு வயதில் இருந்தே பழகியுள்ளேன். சிறந்த தெளிவும், கடின உழைப்பும் தான் சினிமாவில் அவர் வெற்றி பெற காரணமாக உள்ளது. அதே தெளிவு, உழைப்புடன் அரசியல் களத்திலும் விஜய் பயணிக்க வேண்டும்” எனக் கூறினார்.
தமிழகத்தில் விசைத்தறியாளர்கள் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அரசின் விலையில்லா சேலையை பாலிஸ்டர் நூலை தவிர்த்து காட்டன் நூல் மூலம் உற்பத்தி செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது. அத்துடன், தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளதால், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 50,000 விசைத்தறிகள் நிறுத்தப்பட உள்ளன.
ஒலிம்பிக்ஸிற்காக ₹470 கோடி செலவழித்தும் இந்தியாவுக்கு ஒரு தங்கம் கூட கிடைக்காதது ரசிகர்களை வேதனையடைய செய்துள்ளது. கடந்த ஒலிம்பிக்ஸை விட இந்த ஒலிம்பிக்ஸிற்கு இந்தியா அதிகம் செலவழித்துள்ளது. அதிகபட்சமாக, தடகளத்துக்கு ₹96.08 கோடி, பேட்மிண்டனுக்கு ₹72.02 கோடி, குத்துச் சண்டைக்கு ₹60.93 கோடி, துப்பாக்கி சுடுதலுக்கு ₹60.42 கோடி செலவிட்டுள்ளது. ஆனால் 1 வெள்ளி, 5 வெண்கலம் மட்டுமே கிடைத்தது.
வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யவில்லை என்று மகன் சஜீப் வாஜீத் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்க பதிவில், தனது தாயார் ஹசீனா ராஜினாமா செய்ததாக கூறப்படுவது பொய் என்றும், புனையப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தை விட்டு வெளியேறிய போதோ, அதற்கு முன்போ ராஜினாமா செய்ததாக ஹசீனா அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே ஆட்தேர்வு வாரியங்கள் பாராமெடிக்கல் பிரிவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதில், டயட்டிசியன், ஆடியோ லாஜிஸ்ட், ஸ்பீச்சிங் தெரபிஸ்ட், டெண்டல் ஹைஜீனிஸ்ட், லேபரட்டரி சூப்பிரண்ட் உள்ளிட்ட பதவிகளில் 1,376 இடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதிவு வருகிற 17 முதல் செப்.16 வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிஹார் ஜெகனாபாத்தில் உள்ள பாபா சித்தேஷவர்நாத் கோயிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், ஒரு சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. புனித ஸாவான் மாதத்தின் 4வது திங்கட்கிழமை காரணமாக கோயிலில் கூட்டம் அதிகரித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் ஐரோப்பிய நாடுகளை ஆசிய நாடுகள் பின்தள்ளியுள்ளன. பட்டியலில் 2வது இடம் பிடித்த சீனா, ஆசிய நாடாகும். அதேபோல, பதக்கப்பட்டியலில் முதல் 10 இடங்களில் ஜப்பான் (3), தென்காெரியா (8) ஆகியவையும் ஆசிய நாடுகளே. பிரான்ஸ்(5), நெதர்லாந்து(6), பிரிட்டன் (7), இத்தாலி(9), ஜெர்மனி(10) ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகள். அமெரிக்கா (1) ஆஸ்திரேலியா (4) வெவ்வேறு கண்ட நாடுகளாகும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 4 நாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக MET தெரிவித்துள்ளது. இன்று மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூரில் கனமழை பெய்யக்கூடும் என்றும் RMC கூறியுள்ளது. நாளை கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.