news

News August 12, 2024

தங்கம் விலை மேலும் உயர்ந்தது

image

இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த சில நாள்களாக குறைந்த வந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்து ஒரு சவரன் ₹51,760க்கும், கிராமுக்கு ₹25 உயர்ந்து, ஒரு கிராம் ₹6,470க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹87.50க்கும், கிலோ ₹87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 12, 2024

முஸ்லிம் மக்களை சுரண்டி சாப்பிடுகிறார்கள்: எச். ராஜா

image

வக்ஃபு வாரியத்திற்கு இருந்த பல அதிகாரங்களை நீக்கும் சட்டத் திருத்த மசோதாவை, எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக பேசிய எச். ராஜா, வக்ஃபின் சொத்து மதிப்பு ரூ.12 லட்சம் கோடி. ஆனால் அவர்கள் கணக்கு காட்டுவது வெறும் ரூ.200 கோடி. அப்படியென்றால், முஸ்லிம் மக்களை சுரண்டி சாப்பிடும் அமைப்பாக உள்ளனர். இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் முஸ்லிம்களின் எதிரிகள்” என சாடினார்.

News August 12, 2024

பிள்ளைகளிடம் திடீர் மாற்றமா? உடனே இதை செய்யுங்க

image

பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவுரையைக் கூறியுள்ளார். நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “அந்தக் காலத்தில் நாம் இருந்ததை போல, நம் பிள்ளைகள் இல்லை. கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளின் மனநிலை மாறியுள்ளது. உங்கள் பிள்ளைகள் வழக்கத்திற்கு மாறாக சோர்வாகவோ அல்லது பேசாமல் இருந்தாலோ உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறினார்.

News August 12, 2024

ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் டைவர்ஸா? விளக்கம்

image

ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுவது குறித்து அபிஷேக் பச்சன் விளக்கம் அளித்துள்ளார். டைவர்ஸ் குறித்து அபிஷேக் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் இருவரும் அமைதியாக இருப்பதால், இது உண்மையோ என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் ஒலிம்பிக்ஸை காண பாரிஸ் சென்ற அபிஷேக் செய்தியாளரிடம் திருமண மோதிரத்தை காட்டி, இன்னும் திருமண உறவில் இருப்பதாக விளக்கமளித்தார்.

News August 12, 2024

பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்

image

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கி உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 268 புள்ளிகள் சரிந்து 79,459 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84 புள்ளிகள் குறைந்து 24,284 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. செபி தலைவர் மதாபிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமாக சரிவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

News August 12, 2024

JUST IN: ஆம்ஸ்ட்ராங் நண்பர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடப்பதைத் தடுக்க ரவுடி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், ஆம்ஸ்ட்ராங் உடன் மிக நெருக்கமாக இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க சிலர் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து, அவருக்கு நெருக்கமாகவும், அதேசமயம் தலைமறைவாகவும் உள்ள ரவுடிகளை போலீசார் வலைவீசி வருகின்றனர்.

News August 12, 2024

காற்று மாசு சட்டத்தில் கோயில் விழாக்களுக்கு விலக்கு: NGT

image

காற்று மாசு சட்டத்தில் கோயில் விழாவுக்கு விலக்கு உள்ளதாக NGT தெரிவித்துள்ளது. ஆடி விழாக்களால் ஒலிமாசு ஏற்படுவதாக எழுந்த புகார் குறித்து விசாரித்து NGT குழு அளித்த அறிக்கையில், கோயில் விழா காற்று மாசு சட்டத்திற்குள் வராது. அச்சட்டம் விதிமீறும் ஆலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டது. விழாவுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் தேவையில்லை. ஒலி மாசு எனில் அரசிடம் முறையிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News August 12, 2024

மயிலை சமைத்து சாப்பிட்ட யூடியூபருக்கு போலீஸ் வலை

image

தேசியப் பறவையான மயிலை சட்ட விரோதமாக கொன்று சமைத்து சாப்பிட்ட யூடியூபரை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானாவின் சிரிசில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோடம் பிரனய் குமார். யூடியூப் சேனல் நடத்தும் இவர், விதவிதமாக சமையல் செய்து அதை பதிவிட்டு வந்தார். சில தினங்களுக்கு முன்பு மயில் கறி சமைக்கும் வீடியோவை அவர் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையான நிலையில், தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News August 12, 2024

செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? ராகுல்

image

செபி தலைவர் மதாபி புரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். செபியின் நேர்மை, தலைவர் மீதான குற்றச்சாட்டுகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பு? எனவும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் ஏன் பயப்படுகிறார்? என்றும் அவர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.

News August 12, 2024

ஆம்ஸ்ட்ராங் மகள் மீது வழக்கு பதிவு? அரசு விளக்கம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலையைக் கண்டித்து அவரது மனைவி பொற்கொடி சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு பேரணி நடத்தினார். இதில் அவர் தனது 2 வயது மகளுடன் பங்கேற்றார். அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பொற்கொடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவானது. இதில் ஆம்ஸ்ட்ராங் மகள் மீதும் வழக்கு பதிவானதாகத் தகவல் பரவியது. இந்நிலையில், இதனை மறுத்த தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு, அந்த தகவலை வதந்தி எனத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!