India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” பட தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அர்ஜூன் லால், சுந்தர்லால் ஆகியோரிடம் பெற்ற கடனைத் திருப்பி தராத விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஆக.15ஆம் தேதி தங்கலான் படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன், ₹1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 9,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் 15ஆம் தேதி கொடியேற்றவுள்ள புனித ஜார்ஜ் கோட்டை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் குறித்து காவல்துறை நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருவதாக டிஜிபி சங்கர் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் காவல்துறை அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜிவால், குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவர் என்றார். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கொலைகள் குறைந்திருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகளை CM ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்த 4 நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி 2023ல் அமைச்சர் KN நேரு அறிவித்திருந்தார். இதன் மூலம் இந்த பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
ரஷ்யாவுக்குள் 30 KM தூரம் உக்ரைன் படைகள் ஊடுருவி இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா போர் தொடுத்தது முதல் தடுப்பு சண்டையில் ஈடுபட்ட உக்ரைன், முதல்முறையாக தற்போது ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் ஊடுருவியுள்ளது. 2ஆம் உலகப் போரில் ஹிட்லர் படைகள் ஊடுருவியபிறகு, ரஷ்யாவிற்குள் நடைபெறும் முதல் ஊடுருவல் இதுவே. உக்ரைன் ராணுவத்தை விரட்ட ரஷ்ய படைகள் குவிக்கப்படுகின்றன.
இறக்குமதி வரி குறைப்பு காரணமாக ஒரு சவரன் தங்கம் விலை ₹50,000க்கு கீழ் செல்லும் என நடுத்தர மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தில் விலை, கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,120 உயர்ந்துள்ளது. ஆக.7ல் சவரன் ₹50,640 வரை சென்ற நிலையில், இன்று ₹51,760க்கு விற்பனையாகிறது. சர்வதேச அளவில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் தங்கம் விலை குறையும் எனக் கூறப்படுகிறது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள ஐஐடி மண்டியில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய பாடங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. மறுபிறவி, ஆன்மாவை உடலை விட்டு வெளியேற்றுவது போன்ற பாடங்களை ‘Indian Knowledge Systems’ என்ற பெயரில் பொறியியல் பாடத்தில் சேர்த்துள்ளது ஐஐடி. PseudoScience என்று சொல்லப்படும் போலி அறிவியலை, அறிவியல் போன்று சித்தரித்து ஐஐடி மாணவர்களிடையே புகுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்துள்ளார். முதலில் அந்த வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலை சிபிஐ 2ஆவதாக கைது செய்தது. இந்த கைதை எதிர்த்தும், தனக்கு ஜாமின் அளிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அங்கு நடைபெறும் மீட்புப் பணியை ஆய்வு செய்ய சென்ற கேரள அமைச்சர் சசீந்திரன், உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை கண்டு கதறி அழுதார். அப்போது பேசிய அவர், “என் வாழ்நாளில் இதுபோன்ற காட்சியை பார்ப்பேன் என கற்பனை கூட செய்யவில்லை. குடும்பத்தினரை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவேன்? ” எனக் கூறினார்.
அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகளால் அக்குழும பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. இன்று காலை பங்கு வர்த்தகம் தொடங்கியவுடன் 7% வரை சரிந்த பங்குகள் பின்னர் சற்று மீண்டன. 10.30 மணி நிலவரப்படி, அதானி எண்டர்பிரைஸ், அதானி கிரீன், அதானி வில்மர், அதானி பவர் ஆகிய நிறுவனங்கள் தலா 3% சரிவை கண்டன. ஆனால், தேசிய பங்குச்சந்தைகளில் எந்தவித பெரிய மாற்றங்களும் ஏற்படவில்லை.
Sorry, no posts matched your criteria.