India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மாநிலத்தில் இனி தமிழ்நாடு கல்வித்திட்டம் இல்லை என சட்டப்பேரவையில் அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுவை அரசு இந்தாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பயில விரும்பாத மாணவர்களுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தை வழங்க வேண்டும் என்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
12ஆம் தேதி பிறந்தவருக்கான குணாதிசயங்கள் குறித்து நியூமராலஜியில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். *எதையும் நுணுக்கமாக ஆராய்வார்கள் * நிர்வாகத் திறன் மிக்கவர்களாக இருப்பர் * தொழில் சார்ந்தவற்றில் வெற்றி காண்பர் *பழமையை விரும்புவார்கள் *முன்னெச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் *தங்களைச் சுற்றி ஓர் அரண் அமைத்துக் கொண்டிருப்பார்கள்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தனது தந்தை கருணாநிதியை நினைவு கூர்ந்தார் கனிமொழி. அவர் கூறுகையில், “ஒருமுறை டெல்லி சென்ற போது, விமானம் தாமதமாகிவிட்டது. அப்பா போனில் கூப்பிட்டு, விமானம் தாமதமானதை ஏன் கூறவில்லை என அக்கறை கலந்த கோபத்துடன் கேட்டார். நானும் வாக்குவாதம் செய்தேன். ஆனால், இப்போது டெல்லி செல்லும் போது, வந்து சேர்ந்துட்டியா எனக் கேட்க ஆள் இல்லையே என்ற வலி தோன்றும்” என வருந்தினார்.
ரோஹித்தும், கோலியும் துலிப் போட்டியில் விளையாட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை ODI தொடரில் தோல்வியடைந்ததால், உள்நாட்டு கிரிக்கெட்டில் திறமையை நிரூபித்தாலேயே வாய்ப்பு என பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்தார். இதன்படி, விரைவில் நடைபெறவுள்ள துலிப் போட்டியில் ரோஹித், கோலி உள்ளிட்டோர் விளையாட உள்ளதாகவும், பும்ராவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வரலாறு, கலாசாரத்துடன் யானைகளுக்கு தொடர்பு உண்டு என்று PM மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, எக்ஸ் பக்க பதிவில் அவர், யானைகளை பாதுகாக்க பரவலாக நடவடிக்கை எடுத்து வருவோரை பெருமைப்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது என பாராட்டினார். இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
செபி தலைவருக்கு எதிராக ஹிண்டன்பர்க் தாக்கல் செய்த அறிக்கையை பொருட்படுத்தாமல் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன. செபி தலைவர் மதாபி புச், அதானி குழும பங்குகளை வைத்திருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியிருந்தது. இதனால், இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரியும் என்று நினைத்த நிலையில், மாறாக உயர்ந்து வருகிறது. 12 மணி நிலவரப்படி, நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 24,424இல் வர்த்தகம் ஆகிறது.
8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித் தேர்வர்களுக்கு இன்று மாலை ஹால் டிக்கெட் வெளியிடப்படவுள்ளது. தேர்வுத்துறை சேவை மையம் (அ) www.dge.tn.gov.in இணையதளத்தில் மாலை 4 மணி முதல் இதனைப் பதிவிறக்கம் செய்யலாம். இணைய தளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை கிளிக் செய்து, டவுன்லோடு செய்ய வேண்டும்; விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளிடுவது அவசியம். ஆக. 19 முதல் 23 வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனை எதிர்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.
இந்திய தண்டனை சட்டம் (IPC) பிரிவு 377இன் படி தன்பாலின உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவு குற்றமாகக் கருதப்பட்டது. ஆனால், பாரதிய நியாய சன்ஹிதா என்ற புதிய தண்டனை சட்ட புத்தகத்தில் இருந்து இந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் பிரிவு 377ஐ நீக்கக்கூடாது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று நடைபெற இருந்த விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, வேட்டி, சேலை திட்டத்துக்கு மீண்டும் காட்டன் நூல் வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளதால், தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். முன்னதாக, பாலியஸ்டர் நூலை பயன்படுத்த அரசு திட்டமிடப்பட்டிருந்தது. பாலியஸ்டர் நூலால் உற்பத்தியில் பிரச்னை வரும் என போராட்டம் அறிவிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.