India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய தபால்துறையின் PAYMENT வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பைனான்ஸ், தொழில்நுட்பம், இன்ஃபர்மேஷன் செக்யூரிட்டி, புரொடக்ட், இன்டர்னல் ஆடிட், ஆபரேஷன் ஆகிய பதவிகளில் 19 காலி இடங்கள் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க செப்.17ஆம் தேதி கடைசி நாள் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ஆக. 18இல் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் 18ஆம் தேதி மாலை தமிழக அரசு சார்பில் நடைபெறும் இவ்விழாவிற்கு, எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ், அண்ணாமலை, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்டோருக்கு CM ஸ்டாலின் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நூற்றாண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கும், காங்.,க்கும் தொடர்பு உள்ளதாக பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத் குற்றஞ்சாட்டினார். மோடி வெறுப்பு தற்போது இந்தியா வெறுப்பாக மாறியதாகவும், SEBI தலைவருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகவும் சாடினார். காங். ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்தபோதும் இப்படி அறிக்கைகள் வெளியாகாதது ஏன்? என்றும் இந்திய பங்குச்சந்தையை சீர்குலைக்க காங். சதி செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.
3-வது தமிழ்நாடு சர்வதேச பட்டம் விடும் திருவிழா, மாமல்லபுரத்தில் உள்ள திருவிடந்தை கடற்கரையில் வரும் 15 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த விழாவில், தமிழ்நாடு சார்பில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு காளையை போல வடிவமைக்கப்பட்ட பட்டம் பறக்கவிடப்பட உள்ளது. கறுப்பு நிறத்தில் தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காளையை போலவே இந்தப் பட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வங்கதேச கலவரம் காரணமாக இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “வங்கதேசம் நமது நட்பு நாடு. அதன் அனைத்து பிரச்னைகளிலும் இந்தியா அவர்களுடன் துணை நின்றுள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு நாம் உதவாமல் இருந்திருந்தால், எந்த நாடும் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்க விரும்பாது” எனத் தெரிவித்தார்.
இந்திய சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசியக் கொடிக்கு பாதுகாப்பு அளிப்பது அவமானம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், 17 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை, மதுரை, தேனி, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், தி.மலை, தென்காசி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் மிக கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு UGC நெட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுத்துள்ளது. வரும் 21ஆம் தேதி நடைபெறும் இத்தேர்வை 9 லட்சம் பேர் எழுத உள்ள நிலையில், எப்படி ஒத்திவைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியது. அரசின் முடிவில் தாங்கள் தலையிட முடியாது எனவும் கூறியுள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக ஜூன் 18ல் நடந்த இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சச்சினுக்கு தனது மகள் அஞ்சலியை திருமணம் முடிக்க முதலில் பயந்ததாக மாமியார் அன்னபெல் மேத்தா தெரிவித்துள்ளார். சச்சினும், அஞ்சலியும் காதல் திருமணம் செய்து ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆகின்றன. இதுகுறித்து நினைவுகூர்ந்த அன்னபெல், 1990களில் சச்சின் இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் போல இருந்ததாகவும், சக கிரிக்கெட் வீரர்கள் பிளே பாயாக இருந்ததால், மகளின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என அஞ்சியதாகவும் கூறினார்.
வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக விசிக சார்பில் ₹15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கேரள சென்ற அக்கட்சி தலைவர் திருமாவளவன், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அதற்கான காசோலையை வழங்கினார். முன்னதாக அதிமுக சார்பில் ₹1 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. வயநாட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த நிலச்சரிவில், 3 கிராமங்கள் மண்ணில் புதைந்ததுடன், 430 பேர் பலியாகியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.