India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ஜி கர் மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதி தெரிவித்துள்ளது. அதேநேரம், பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் காலியாக உள்ள 11,558 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதுநிலை அலுவலர் பிரிவில் 8,113 இடங்களும், இளநிலை அலுவலர் பிரிவில் 3,445 இடங்களும் நிரப்படவுள்ளன. +2 தேர்ச்சி பெற்றவர்கள், டிகிரி முடித்தவர்கள் என 2 விதமான பணிகளுக்கு அக்.13ஆம் தேதிக்குள் <
TVKவில் செஞ்சி ராமச்சந்திரன் இணையவுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என இபிஎஸ் மறுத்துள்ளார். இது போன்ற வதந்தி பரப்புபவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக ஒரு கடல் என்றும், வலிமையான இயக்கம் எனவும் நம்பிக்கை தெரிவித்த அவர், செஞ்சி ராமசந்திரனை போல ஆயிரக்கணக்கான பேர் அதிமுகவில் அங்கம் வகித்து உழைத்து வருவதாகவும் விளக்கமளித்தார்.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இயற்கைக்கு மாறான முறையில் அவர் மரணமடைந்துள்ளதாக விசாரணை அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க மே.வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய அவர் ஆக. 8இல் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Mpox அறிகுறியுடன் இந்தியா வந்தவர் எந்த நாட்டில் இருந்து வந்தார்? தற்போது எங்கே இருக்கிறார்? என்ற தகவல்களை மத்திய அரசு ரகசியமாக வைத்துள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் Mpox வைரஸ் பரவாமல் தடுக்க அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
2026 தேர்தலோடு அதிமுக அழிந்துவிடும் என்று தினகரன் கூறுவது உண்மைதான் என EX அமைச்சர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். இபிஎஸ் தலைமையால் அதிமுகவின் வாக்கு வங்கி 20% ஆக குறைந்துள்ளதாகவும், அதிமுக ஒன்றிணைய கூடாது என்று நினைப்பவர்கள் விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் எனவும் குறிப்பிட்டார். EPS, OPS, TTV, சசிகலா உள்ளிட்டவர்கள் இணைய வேண்டும் என்றும், 2025இல் இதற்கு தீர்வு கிடைக்கும் எனவும் கூறினார்.
சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நேற்று ஒரே நாளில் 6 பேர் <<14057219>>படுகொலை<<>> செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதெல்லாம் CM ஸ்டாலினுக்கு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், தம்மை சுற்றி மாய வளையம் அமைத்து TN சொர்க்கபுரியாக திகழ்வதாக நம்பிக் கொண்டிருப்பதாகவும் முதல்வரை விமர்சித்துள்ளார்.
கல்விக் கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என இயக்குநர் அமீர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ள அவர், கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்துவதை அரசு தடை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். எந்த விதமான தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சியோ இல்லாதவர்களை சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் பள்ளிகளில் பேச அழைக்கக் கூடாது எனவும் கோரியுள்ளார்.
தவெகவின் மாநாடு தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 23ம் தேதி விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக 33 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியும் வழங்கியுள்ளது. இந்நிலையில், மாநாடு ஏற்பாடுகள் செய்ய இன்னும் குறுகிய காலமே இருப்பதால், மாற்றுத் தேதியில் மாநாட்டை நடத்த அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓலா எலக்ட்ரிக் பங்கின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ₹76க்கு ஐபிஓ வெளியான நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி சந்தையில் பட்டியலிடப்பட்டு ₹157 வரை தொடர் ஏற்றம் கண்டது. லாபம் பார்க்காத இந்நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரித்து வந்த நிலையில், தற்போது மளமளவென சரிந்து ₹105இல் வர்த்தகமாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.