news

News August 12, 2024

முதலிடத்தை தக்க வைத்த சென்னை ஐஐடி

image

சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், ஒட்டு மொத்த பிரிவில் தொடர்ந்து 6ஆவது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐடி 2ஆவது இடத்தையும், மும்பை ஐஐடி 3ஆவது இடத்தையும், டெல்லி ஐஐடி 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

News August 12, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய முடிவு

image

<<13835379>>செந்தில் பாலாஜி <<>>வழக்கில் விசாரணை எப்போது முடியும் என ED-க்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும், ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி, ஓகே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு 3 மாதத்தில் விசாரணை முடியும் என ED கூறியது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஜாமின் தொடர்பான வழக்கு என்பதால் முதலில் முடிவெடுக்க விரும்புகிறோம் என கூறினர். இது, செந்தில் பாலாஜிக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

News August 12, 2024

சிறந்த வீரராக இங்கிலாந்து பிளேயர் தேர்வு

image

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்காக சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த வீரருக்கான பரிந்துரையில் வாஷிங்டன் சுந்தர் பெயரும் இடம்பெற்றிருந்தது.

News August 12, 2024

ராகுல் எதிர்கட்சியிலே இருப்பார்: கங்கனா

image

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எப்போதும் எதிர்கட்சித் தலைவராகவே இருப்பர் என பாஜக எம்பி கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார். ராகுல் பிரதமராகவில்லை என்றால், நாட்டை அழிப்பதே அவரது செயல்திட்டமாக இருக்கும் என்ற அவர், ஹிண்டன்பர்க் அறிக்கையின் அடிப்படையில் அவர் தவறான கருத்துக்களை கூறி வருவதாக தெரிவித்தார். மேலும், நாட்டின் பாதுகாப்பை சீர்குலைக்க ராகுல் முயல்வதாகவும் விமர்சித்துள்ளார்.

News August 12, 2024

உதயநிதி துணை முதல்வராக வேண்டும்: அமைச்சர்

image

உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது தங்கள் விருப்பம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். இதுகுறித்து பேசிய அவர், “உதயநிதியை உடனடியாக துணை முதல்வராக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர், பரிசீலனையில் இருக்கிறது; பொறுத்திருங்கள் என பதிலளித்துள்ளார் எனக் கூறினார். உதயநிதிக்கு விரைவில் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2024

செந்தில் பாலாஜி ஏன் சிறையில் இருக்கப் போகிறார்: வழக்கறிஞர்

image

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது. அதுபற்றி வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “செந்தில் பாலாஜிக்கு அப்படியான அதிகாரங்கள் இருந்தால் அவர் இன்று வரை சிறையில் இருக்க மாட்டார். எப்போதோ வெளியே வந்திருப்பார்” என்றார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்தார்.

News August 12, 2024

பெண் மருத்துவரின் பெற்றோரை சந்தித்த மம்தா

image

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய மருத்துவர்கள் சங்கம் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சந்தித்துள்ளார். அப்போது இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் CBI விசாரணை கோரப்படும் என உறுதியளித்தார்

News August 12, 2024

ஒவ்வொருவர் வாழ்விலும் பங்குச்சந்தை அவசியம்

image

பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யாதவர்கள் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து கவலையில்லாமல் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் அதில் பங்கு உள்ளது என்று முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி, வருங்கால வைப்பு நிதி, காப்பீடு நிறுவனங்கள் ஆகிய அனைவருமே பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்துள்ளனர். எனவே, சந்தை மாற்றங்கள் அனைவரையும் மறைமுகமாக பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

News August 12, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகள்

image

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கலாமா என்று அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து, அவர் மீதான விசாரணையை எப்போது தொடங்குவீர்கள் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, மாநில அரசு செந்தில் பாலாஜிக்கு உதவுவதாக மத்திய அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து, விசாரணை நடைபெறாத நிலையிலும் அவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முடியாது என்று நீதிபதி கூறினார்.

News August 12, 2024

மூத்த வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதா!

image

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் நிச்சயமாக துலிப் டிராஃபி (உள்ளூர் தொடர்) விளையாட வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. ஆனால், தனிப்பட்ட வாழ்வை விடுத்து, தொடர்ந்து சர்வதேச போட்டிகள் விளையாடும் வீரர்களை உள்ளூர் போட்டிகளிலும் விளையாட கட்டாயப்படுத்துவது சரியா என்று ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உங்களது கருத்து என்ன?

error: Content is protected !!