India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘அமரன்’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளதால், SK ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். இந்நிலையில், முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகி, அவர்களை டபுள் குஷியாக்கியுள்ளது. அதாவது, சுதந்திர தினத்தன்று முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். GV இசையில் துள்ளலான பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘அமரன்’ படத்துக்காக யாரெல்லாம் வெயிட்டிங். கமெண்டில் சொல்லுங்க.
சவுக்கு சங்கருக்கு உதகை நீதிமன்றம் மற்றும் சிவகங்கை கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய புகாரில், மே 4ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர் மீது உதகை காவல் ஆய்வாளர் அல்லிராணி மற்றும் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள் ஜாமின் வழங்கி உத்தரவிட்டன.
பால் மற்றும் சர்க்கரை இல்லாத காஃபி பிளாக் காஃபி என்று அழைக்கப்படுகிறது. இதை அளவாக எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும், இது கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது.
சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என மக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், சென்னையில் கார் பந்தயம் நடத்தப்போவதாக அறிவித்து இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம் என OPS விமர்சித்துள்ளார். தமிழகத்தின் கடன், நிதிப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு கார் பந்தயம் அவசியமா என அரசு எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு எந்த பலனும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற பாக்., வீரர் அர்ஷத் நதீமுக்கு வித்தியாசமான பரிசு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அர்ஷத்தின் மாமனார் எருமை மாடு ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கியுள்ளார். தங்கள் கலாச்சாரத்தின்படி எருமை மாடு மிக மதிப்புள்ள, கவுரவமிக்க பரிசாக பார்க்கப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார். இந்த கவுரவமிக்க பரிசு தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விசிக வன்னியரசு புகார் அளித்துள்ளார். ரஞ்சித் நடித்துள்ள ‘கவுண்டம்பாளையம்’ படம் சமீபத்தில் ரிலீசானது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், ஆணவக் கொலைகளை ஆதரித்து அவர் பேசியதாக வன்னியரசு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவரது பேச்சு சமுதாயத்தில் பிரிவினையை தூண்டும் வகையில் உள்ளதாகவும் தனது புகாரில் அவர் கூறியுள்ளார்.
பள்ளி வேலை நாட்கள் எண்ணிக்கையை வழக்கம்போல் 210 நாட்களாக குறைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் 10 சனிக்கிழமைகள் உட்பட 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், 210 நாட்களாக குறைக்கப்படவுள்ளது. கடந்த சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
*நிதி இலக்கு இல்லாமல் முதலீடு செய்யக் கூடாது. எந்த இலக்குக்காக முதலீடு செய்கிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும். *சந்தை இன்னும் கொஞ்சம் சரிந்தால் முதலீடு செய்யலாம் என டைமிங் செய்யக் கூடாது. *மொத்த பணத்தையும் ஒரே ஃபண்டில் போடக் கூடாது. ஈக்விட்டி, ரியால்டி, தங்கம் போன்ற வெவ்வேறு வகை சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும். *அடிக்கடி லாபத்தை பார்க்காமல் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும்.
உலக மல்யுத்த கூட்டமைப்பு, உடல் எடை சார்ந்த விதிகளில் மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 100 கிராம் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மல்யுத்த தொடர்களில் 2 கிலோ வரை கூடுதல் எடை அனுமதிக்கப்படும் நிலையில், ஒலிம்பிக்ஸில் எடை தொடர்பான விதி கடுமையாக பின்பற்றப்படுகிறது.
நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சென்னை அண்ணா பல்கலை. முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், கோவை பாரதியார் பல்கலை. 8ஆவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில், கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி 7ஆவது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 8ஆவது இடம் பிடித்துள்ளன. சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் கோவை CMC 3ஆவது இடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.