India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தின பொதுவிடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு, 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து ஆக.14ஆம் தேதி 470, ஆக.16, 17ஆம் தேதிகளில் 365 சிறப்பு பேருந்துகள் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும். அதேபோல், தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நயன்தாராவின் புதிய படத்தை நித்திலன் சுவாமிநாதன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘குரங்கு பொம்மை’, ‘மகாராஜா’ ஆகிய வெற்றி படங்களை இயக்கி, ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நித்திலன் சுவாமிநாதன். இவரது அடுத்த படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், நயனை மையமாக வைத்து அவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எந்த மாதிரியான கதைகளமாக இருக்கும்?
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு காரணமாக இன்று காலை சரிவுடன் தொடங்கிய தேசிய பங்குச் சந்தை (NIFTY) 10 மணிக்கு மேல் ஏற்றம் பெறத் தொடங்கியது. இருப்பினும் வர்த்தக நேர முடிவில் 20 புள்ளிகள் குறைந்து 24,347 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதேபோல், மும்பை பங்குச்சந்தை (SENSEX) தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. இறுதியில் 56 புள்ளிகள் குறைந்து 79,648 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் GOAT படத்தின் டிரெய்லர் சிறப்பாக உருவாகி வருவதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் உருவாகும் ‘கங்குவா’ டிரெய்லர் இன்று வெளியானது. அதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்களும் அப்டேட் கேட்டதால் தயாரிப்பாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். டிரெய்லர் குறித்த உறுதியான தகவலை நாளை வெளியிட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஜூலை மாதத்தில் 3.54 சதவீதமாக குறைந்துள்ளது. இது ரிசர்வ் வங்கி எதிர்பார்த்த 4 சதவீதத்தை விட குறைவு என்பதால் பொருளாதார அறிஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று நேரத்தில், உலகம் முழுவதும் உயர்ந்த பணவீக்கம், தற்போது படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்திய சில்லறை பணவீக்கம் 5 ஆண்டுகளுக்கு பின் 4 சதவீதத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.
சென்னையில் பேருந்து சேவையை மேம்படுத்த ஆலோசனை வழங்கும் நிபுணர்களுக்கு, தொழிற்பயிற்சி வழங்க MTC திட்டமிட்டுள்ளது. நகர்ப்புற திட்டமிடல், போக்குவரத்து திட்டமிடல், போக்குவரத்து பொறியியலில் முதுநிலை பட்டப்படிப்புடன் ஓராண்டு முன் அனுபவம் தேவை. மாதம் ₹50,000 ஊக்கத்தொகையுடன் ஓராண்டுக்கு பயிற்சி. ஆக.15க்குள் mtc.chn@gmail.com, amprojects1.mtc@gamil.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் எல்லைச் சாலை அமைப்பில் (B.R.O) 466 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ராட்ஸ்மேன், சூப்பர்வைசர், டிரைவர் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. முழு விவரமும் www.bro.gov.in இல் அறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யலாமே. PLS SHARE
பார்வையற்ற வாடிக்கையாளர்களுக்காக புதிய Debit Card-ஐ பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. பிரெய்லி முறையில் இந்த ATM கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. விரல்களால் தொட்டு உணரும் வகையில் உயர்த்தப்பட்ட புள்ளிகள், எழுத்துக்களுடன் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. சிப்பின் எதிர் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள வட்டமான பிளவு, ATM மையங்களில் கார்டை பயன்படுத்தும் போது அதன் திசையை அறிந்து கொள்ள உதவுகிறது.
துலீப் டிராபியின் முதல் போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த துலீப் டிராபி, செப்.5ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை கர்நாடக கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, இந்த போட்டிகள் சிறந்த பயிற்சி ஆட்டமாக இருக்கும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. ஒரு டாலருக்கு 83.95 ரூபாய் என்று தொடங்கிய வர்த்தகம், 3 பைசா சரிந்து 83.98 வரை வீழ்ச்சி கண்டது. பின்னர், வர்த்தக நேர முடிவில், ஒரு பைசா உயர்ந்து 83.97இல் முடிவடைந்தது. வரலாற்றில் இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு 83.98 வரை சரிந்ததில்லை. நாளுக்கு நாள் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.