India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மொச்சை கொட்டையில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எலும்புகளை வலுவடையச் செய்யும் மெக்னீசியம், கால்சியம் சத்துக்களும் அதிகளவு உள்ளன. இதில் உள்ள இரும்புச்சத்தால், இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சமநிலையில் வைக்கவும் மொச்சை கொட்டை பெருமளவு பயன்படுகிறது..
மூத்தகுடிமக்கள், ஊனமுற்றவர்கள் மற்றும் கர்ப்பிணிகளின் நலன் கருதி ரயில்களில் அவர்களுக்கு லோயர் பெர்த் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிடில் & அப்பர் பெர்த்தில் ஏறி படுப்பதற்கு சிரமப்படுவார்கள் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஸ்லீப்பர் வகுப்புகளில் 6 -7 பெர்த்கள், 3ஏசி பெட்டிகளில் 4 -5 பெர்த்கள், 2ஏசி பெட்டிகளில் 3-4 பெர்த்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
விராட் கோலியின் உடற்தகுதி 19 வயது இளைஞரை விட சிறப்பாக இருப்பதாக ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார். ரோஹித் ஷர்மா, கோலி ஆகியோரின் ஃபிட்னஸ் குறித்து பேசிய அவர், இன்னும் 2 ஆண்டுகளுக்கு ரோஹித் எளிதாக விளையாட முடியும் என்றார். கோலியின் உடற்தகுதி குறித்து உங்களுக்கு தெரியாது எனக் கூறிய அவர், அணியின் ஃபிட்டஸ்ட் பாய் என புகழாரம் சூட்டினார். 19 வயது இளைஞரையும் ஃபிட்னஸில் கோலி வீழ்த்துவார் என்றார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முட்டை விலை அதிகரித்து வருகிறது. நேற்று, 10 காசு உயர்ந்த நிலையில், இன்று மேலும் 10 காசுகள் அதிகரித்து முட்டையின் விலை ₹4.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி மாதம் முடிய 4 நாட்களே உள்ளது. இதனால், முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால், விலை மேலும் அதிகரிக்கும் என மொத்த கொள்முதல் பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லையில் மிக கனமழை பெய்யக்கூடும். அதேபோல், குமரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். எனவே, இரவில் வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என SK தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வினோத்ராஜ் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்ற இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். பாண்டி, மீனா கதாபாத்திரங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலினின் இல்லம் முதல் தலைமை செயலகம் அமைந்துள்ள பகுதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 78ஆவது சுதந்திர தினம், நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 14, 15ஆம் தேதிகளில் இந்த பகுதிகளில் (RED ZONE) ட்ரோன், ஏர் பலூன் உள்ளிட்டவை பறக்க தடை விதித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தனது மகன்களுடன் நேரத்தை செலவிட்ட கியூட்டான தருணங்களை புகைப்படம் எடுத்து, இன்ஸ்டாகிராமில் நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ளார். ‘பணிக்கு திரும்பும் முன் அன்பானவர்களுடன் சில நேரம்…’ என்ற கேப்சனுடன் அவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். விரைவில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP) ஜூன் மாதம் 4.2% வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு 4%ஆக இருந்தது. IIP குறியீடு கடந்த ஆண்டு ஜூனில் 143.9ஆக இருந்த நிலையில், தற்போது 150ஆக அதிகரித்துள்ளது. மைனிங் 10.3%, ஒட்டுமொத்த உற்பத்தி 2.6%, மின்சார உற்பத்தி 8.6% வளர்ச்சி கண்டுள்ளது. மின்சார உபகரணங்களின் உற்பத்தி 28.4%, உலோக உற்பத்தி 4.9% வளர்ச்சி அடைந்துள்ளது.
இரவில் தாமதமாக உண்ணுவதும், தூக்கத்திற்கும் சாப்பிடுவதற்குமான இடைவெளி குறைவதும் கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளன. இரவில் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது உடல் பருமனை ஏற்படுத்தும். காய்கறிகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளாவிட்டால் இதயம் சார்ந்த நோய்கள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
Sorry, no posts matched your criteria.