news

News August 12, 2024

மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்த அறுவை சிகிச்சை

image

உ.பி.யில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆணுக்கு, கருப்பை கண்டறியப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு குடலிறக்க பிரச்னைக்கான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், கருப்பை இருந்ததை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, அவரது கருப்பை அகற்றப்பட்டது. 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி, 2 குழந்தைகளுக்கு தந்தை ஆவார். பிறவி குறைபாட்டால் கருப்பை வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

News August 12, 2024

நேரடி வரி வருவாய் 24% உயர்வு

image

நேரடி வரி வருவாய் (DT) 23.99% அதிகரித்து, ₹8,13,170 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ₹6,55,843 கோடியாக இருந்தது. ஆகஸ்ட் 11ஆம் தேதி கணக்கீட்டின்படி, நிகர DT ₹5,65,815 கோடியில் இருந்து, 22.48% அதிகரித்து, ₹6,92,987 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ₹1,20,183 கோடி Refund அளிக்கப்பட்டுள்ளது. நேரடி வரி என்பது கார்ப்பரேட் வரி, தனிநபர் வரி, STT உள்ளிட்டவை அடங்கும்.

News August 12, 2024

பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

image

மத்திய பிரதேசத்தில், பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணி கம்லாப்தி-சஹர்ஷா இடையே சென்ற பயணிகள் ரயில், இடார்ஸி ரயில் நிலையம் அருகே தடம் புரண்டதில், 2 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகின. ரயில் நிலையம் அருகே வந்ததால், ரயில் மெதுவாக சென்றதை அடுத்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் 12 முறை ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2024

சிம் கார்டு: செப்டம்பர் 1 முதல் புதிய விதி

image

போலி மற்றும் Spam அழைப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக TRAI புதிய விதியை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தவுள்ளது. தனிப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மார்க்கெட்டிங் மற்றும் புரொமோஷன் அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை 2 ஆண்டுகளுக்குத் தடை செய்ய தொலைத்தொடர்பு வழங்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், Spam மற்றும் மோசடி அழைப்புகளுக்கு இணைப்புகளை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்களையும் தடை செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

News August 12, 2024

ஆக.16இல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு CM ஸ்டாலின் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முப்பெரும் விழா குறித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

News August 12, 2024

டாஸ்மாக் வேண்டும் என மக்கள் மனு

image

தர்மபுரி மாவட்டத்தில் 7 கிராம மக்கள் சேர்ந்து, தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நலப்பரம்பட்டி, கெட்டூர், பலஞ்சர அள்ளி, ஆதனூர், நல்லாம்பட்டி, வண்ணாத்திபட்டி ஆகிய பகுதியில் வசிக்கும் மக்கள், 20 கிமீ பயணம் செய்து மது வாங்க வேண்டிய நிலை இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு அளிக்க ஆண்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

News August 12, 2024

பள்ளி பாட புத்தகங்களின் விலை உயர்ந்தது

image

தமிழகத்தில் 1-12ஆம் வகுப்பு வரை, பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தியுள்ளது. பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் 5 கோடி பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. பிறருக்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பாட புத்தகங்களின் விலை ₹150-₹340 வரை உயர்ந்துள்ளதால் தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News August 12, 2024

மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்

image

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ள நிலையில், கஞ்சா வைத்திருந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கின் குண்டர் சட்டத்தை நீதிமன்றம் 3 நாட்களுக்கு முன் ரத்து செய்த நிலையில், போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

News August 12, 2024

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவு

image

15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் வேலையின்மை குறைந்துள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது. ஆனால் ஆசியா இதில் பின்தங்கியுள்ளது. உலகில் 15-24 வயதுள்ள 64.9 மில்லியன் மக்கள் வேலையின்றி இருப்பதாக ILO கூறியுள்ளது. மேலும், உற்பத்தி, நவீன சேவைகள் துறைகளில் வேலை பற்றாக்குறையாக இருப்பதாகவும், படித்த இளைஞர்களுக்கு உயர் திறன் வேலைகள் கிடைப்பது இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

News August 12, 2024

பிரபல ரவுடி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள்தண்டனை

image

பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன் உட்பட 4 பேருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2011இல் பழைய வண்ணாரப்பேட்டையில் கருணாகரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் சென்னையை உலுக்கியது. இதுதொடர்பான வழக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும், குற்றவாளிகள் 4 பேருக்கு தலா ₹1.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!