India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டு வசதி திட்ட முறைகேட்டில் பாக்., உளவுத்துறையின் முன்னாள் தலைவர் ஃபைஸ் ஹமீதை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. பாக். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, அவர் ராணுவ காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஹமீது மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க கடந்த ஏப்ரலில் பாக்., ராணுவம் விசாரணை குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் நிறைவடைந்து விட்டது. இனி அடுத்த ஒலிம்பிக்ஸ், எந்த நாட்டில் நடத்தப்படவுள்ளது என்பது தெரியுமா? அதை தற்போது தெரிந்து கொள்வோம். அடுத்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2028ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. அந்த நாட்டின் லாஞ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அப்போட்டிகளை நடத்துவதென்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.
பாரிஸில் உள்ள ஒலிம்பிக்ஸ் கிராமத்தில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியா புறப்பட்டார். அவர் தற்போது மனதளவில் சற்று தேறி இருப்பதாகவும், கொஞ்சம் சாப்பிட தொடங்கி இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமானவர்கள் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும் அவர் யாருடனும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு துணை நிற்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
நாம் வாங்கும் எலெக்ட்ரிக் சாதனங்கள் போலியானதா என்பதை BIS R-number மூலம் கண்டுபிடிக்கலாம். எலெக்ட்ரிக் பொருட்கள் இந்திய சந்தையில் நுழையும் முன், இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) பதிவு செய்ய வேண்டும். அதன்படி, அந்த பொருட்களுக்கு R-number வழங்கப்படும். UMANG செயலியில் ‘BIS R number verify’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து, R-number ஐ உள்ளீடு செய்தால் உற்பத்தியாளரின் அனைத்து தகவல்களும் வந்துவிடும்.
அடுத்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை 152.2 கோடியாக உயரும் என புள்ளியியல் மற்றும் திட்ட அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தற்போது 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் உள்ள நிலையில், 2036ல் 952 ஆக உயரும் என்றும், பெண்களின் சதவீதம் 48.8% ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 15 வயதுக்குட்பட்டோரின் விகிதம் குறையும், 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
*மேஷம் – செலவு அதிகரிக்கும்
*ரிஷபம் – தடங்கல் ஏற்படும்
*மிதுனம் – நட்பு வட்டம் பெருகும்
*கடகம் – வரவு தேடி வரும்
*சிம்மம் – கவனம் தேவை
*கன்னி – அமைதியான நாள்
*துலாம் – வீம்பை தவிர்க்கவும்
*விருச்சிகம் – நன்மை உண்டாகும்
*தனுசு – போட்டி அதிகரிக்கும்
*மகரம் – பரிசு கிடைக்கும் *கும்பம் – நஷ்டம் ஏற்படும் *மீனம் – மகிழ்ச்சியான நாள்
சர்வதேச அளவில் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்திய நிறுவனங்களுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஹிண்டன்பர்க் போன்ற அமெரிக்காவின் short-sellers ஏஜென்ஸிகளின் தாக்குதலை சமாளிக்க தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்திய நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதால் நிபுணர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாதிப்படைவது பொதுவான வர்த்தகர்களே எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தன்று பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற வீரர்களை பிரதமர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிகழ்ச்சியை முடித்து விட்டு பிற்பகல் 1 மணிக்கு வீரர்களை சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு சென்ற 117 வீரர்களும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் தொலைபேசியில் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில், திருச்சி, தேனி, திண்டுக்கல், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே சேலம், கரூர், நாமக்கல் உள்பட 15 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 ஆண்டுகால Fixed Deposit-களுக்கு இந்தியாவின் 5 முன்னணி வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகிறது என்பதை பார்ப்போம். HDFC மற்றும் ICICI வங்கிகள் 7%, மூத்த குடிமக்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது. Bank of Baroda 7.15%, மூத்த குடிமக்களுக்கு 7.65% வட்டி வழங்குகிறது. அதேபோல் Kotak Mahindra 7%, மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியும், SBI 6.75%, மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியும் வழங்குகிறது.
Sorry, no posts matched your criteria.