India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமைச்சர்களுடன் CM ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் CM ஸ்டாலின் வரும் 27ம் தேதி அமெரிக்க செல்ல உள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதல்வரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. அத்துடன், துணை முதல்வர் நியமனம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிம்முக்கே நீங்கள் போக வேண்டாம். வீட்டில் இந்த 5 வேலைகளை செய்தாலே தொப்பைக்கு டாட்டா சொல்லலாம் என மருத்துவ ஆய்வுகளே சொல்லிருச்சு. 1. வீட்டில் உள்ள செடிகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றுங்கள். 2. வீடு முழுவதும் ஒருமுறை தண்ணீரை கொட்டி மாப் போடுங்கள். 3. பாத்ரூமை கழுவுங்கள். 4. கதவு, ஜன்னல்களை துடையுங்கள். 5. துணிகளை கைகளாலே துவையுங்கள். இதை தினமும் செய்தாலே ஒருசில மாதங்களிலேயே தொப்பைக்கு பைபை.
சென்னை மதுரவாயலில் பிரபல ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் என்கவுன்டர் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி மயிலை சிவக்குமார் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரோஹித் ராஜனை பிடிக்க முயற்சி செய்தபோது, போலீசாரை அவர் தாக்கியுள்ளார். இதில், 2 போலீசார் பலத்த காயமடைந்ததால், தற்காப்புக்காக சுட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து, அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை, 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக்க பாடுபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். CBSE பள்ளிகளிலும், தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்துவதாக கூறிய அவர், அறிவியல், மருத்துவ நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். தாய்மொழி கல்வியை ஊக்குவிக்க, தமிழ் வழியில் படித்தோருக்கு கல்லூரி சேர்க்கையில், 20% இட ஒதுக்கீடு தரப்படுவதாகவும் அவர் கூறினார்.
தென்காசியை தொடர்ந்து, நெல்லையில் சசிகலா 2ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். EPS தலைமையிலான அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை நேரில் சந்தித்து, மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கும் வகையில், இன்று முதல் ஆக.18ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால், அவரது அரசியல் ரீதியான இந்த பயணதிற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஷேக் ஹசீனா விவகாரத்தில் இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படுமா என வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டு வெளியுறவு ஆலோசகர் தெளஹித் முகமது ஹுசேன், இந்தியாவில் ஷேக் ஹசீனா ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குதான் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவர் அங்கு நீண்டகாலம் இருந்தாலும் இந்தியாவுடனான நட்பு மாறாது. ஒரு நபர் தங்குவதால் அந்நாட்டுடனான நட்பை ஏன் முறிக்க வேண்டும்? என அவர் கூறினார்.
சுதந்திர தினத்தையொட்டி (ஆக.15), தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில், டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், ஹோட்டல்களுடன் இணைந்த தனியார் பார்கள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறினால் விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
விருதுநகர், நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியுள்ளது. மேலும், இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப் போட்டியில் கூடுதல் எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து இந்தியா சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இன்று வெளியாகும் தீர்ப்பில், வினேஷ் போகத்திற்கான நீதி கிடைக்கும் என இந்திய மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகே உள்ளது ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆலயம். கயிலை மலைக்குச் சென்று வழிபட்ட சித்தர்கள் கடம்பூர் கோயில், கயிலைக்கு நிகரானது எனக் கருதி இங்கு வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயத்தின் சிறப்பே பிரதோஷ மூர்த்திதான். இங்குள்ள அமிர்தகடேசுவரர் ஆயுள் பலம் தருபவர் என்பதால் இங்கு சஷ்டிய பூர்த்தி, சதாபிஷேகம் செய்தால் ஆயுளும், ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.