India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Firstcry என்ற குழந்தைகளுக்கான கன்ஸ்யூமர் பொருட்கள் விற்கும் நிறுவனம் இன்று பங்குச்சந்தைக்குள் நுழைந்திருக்கிறது. ஒரு பங்கின் விலை ₹465 என்று FirstCry அறிவித்திருந்த நிலையில் முதல் நாளிலேயே அது ₹651 என்று ₹186 (40%) லாபத்துடன் வர்த்தகம் ஆனது. அதாவது, ₹14,880க்கு ஒரு lot (32 பங்குகள்) வாங்கிய சில்லறை முதலீட்டாளர்களுக்கு முதல் நாளிலேயே ₹5,000 லாபம் கிடைத்திருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே CM ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. CMன் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ள சலுகைகள் குறித்தும் இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. முக்கியமாக, தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸை தொடர்ந்து, இடதுசாரிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. சுதந்திர தினத்தையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்நிலையில், தேர்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக அவர் செயல்படுவதாகக் கூறி, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிக்கின்றன. எனினும், திமுகவின் நிலைப்பாடு தெரியவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் உள்ள ‘மதசார்பற்ற’ மற்றும் ‘சோசியலிஸ்ட்’ வார்த்தைகளை நீக்கக்கோரி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது. 1976ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்தின்போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்த வார்த்தைகளை அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தார்.
இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் போட்டிகளில் பங்கேற்க 18 மாதங்களுக்கு தடை விதிப்பதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் 3 முறை ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் வரும் 28இல் தொடங்கும் பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் அவர் பங்கேற்க முடியாது. டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக அவர், தங்கம் வென்றிருந்தார்.
மருத்துவ உலகில் அதிசயங்கள் புதிதல்ல. ஆனால், உ.பி.யில் நடந்த சம்பவம் மருத்துவர்களையே மிரளச் செய்துள்ளது. கோரக்பூரைச் சேர்ந்தவர் ராஜ்கிர் மிஸ்த்ரி (46). 2 குழந்தைகளின் தந்தையான இவருக்கு குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சை அண்மையில் நடந்தது. அப்போது அவரது வயிற்றுக்குள் கர்ப்பப் பை, கருமுட்டை இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வருகிறார்.
வீரர்களால் அதிக ப்ரபோசல்கள் செய்யப்பட்ட ஒலிம்பிக்ஸ் என்ற சாதனையை 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் படைத்துள்ளது. ‘காதல் நகரம்’ என்று அழைக்கப்படும் பாரிஸில், மொத்தம் 17 நாள்கள் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் தொடரில் காதலை வெளிப்படுத்தும் 9 ப்ரபோசல்கள் நடந்த களமாக அந்நகரம் மாறியது. வீரர்கள் வெற்றியுடன் தங்கள் அன்பையும் பகிர்ந்துகொண்டது ஒட்டுமொத்த விளையாட்டு உலகையும் கவர்ந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் ₹760 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹760 உயர்ந்து ₹52,520க்கும், கிராமுக்கு ₹95 உயர்ந்து ₹6,565க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 அதிகரித்து ₹88.50க்கும், கிலோ வெள்ளி ₹1000 அதிகரித்து ₹88,500க்கும் விற்பனையாகிறது.
வங்கதேச விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எந்தவிதமான தலையீடும் இல்லை என வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கதேச பிரச்னையில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி மட்டுமே. வங்கதேசத்தின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. முன்னதாக, வங்கதேசத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கு அமெரிக்கா காரணம் என்று ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியிருந்தார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பனை சேர்ந்த மீனவர்கள், நாட்டுப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்கள் இலங்கை காங்கேசன் துறைமுகம் அழைத்துச்செல்லப்பட்டனர். ஏற்கெனவே, நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும், அவர்களது படகுகளும் இலங்கை வசமுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.