India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சில பெண்களுக்கு மாதவிடாய்க்கு பிறகும் வயிற்று வலி தொடர்வதுண்டு. இது மாதவிடாய்க்கு பிந்தைய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னை 20% -30% பெண்களுக்கு இருப்பதாகவும், சோம்பல், மனநிலை மாற்றங்கள், தலைவலி போன்ற பிரச்னை அவர்களுக்கு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சிறப்பான வாழ்க்கை முறை மூலம் இதிலிருந்து விடுபடலாம் என கூறியுள்ளனர்.
ஹிண்டன்பர்க் அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆகஸ்ட் 22ஆம் தேதி அனைத்து மாநில அமலாக்கத்துறை அலுவலக வாயிலிலும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அதானி குழுமத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செபி தலைவர் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த கலவரம் தொடர்பாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலிருந்து வெளியேறி அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது வங்கதேச காவல்துறை. ஷேக் ஹசீனா உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக 600 நாட்கள் திட்டத்தை தீட்டியிருக்கிறது. திருப்பூரில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை இத்திட்டத்தை அறிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 600 நாட்கள் இருக்கும் நிலையில், இதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் சரத்குமார், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் ரூ.50 கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக வேட்பாளர் தேவநாதனை போலீசார் கைது செய்துள்ளனர். ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ சார்பில் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியதாக புகார் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அந்நிறுவன தலைவரான தேவநாதனை திருச்சி போலீசார் கைது செய்தனர். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இவர் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதனை எதிர்த்து வங்கதேச முஸ்லிம்கள் ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கதேசத்தை முஸ்லிம் நாடாக மாற்ற ஜமாத் இ இஸ்லாமி முயற்சிக்கிறது. நாங்கள் அதனை அனுமதிக்க மாட்டோம். இந்துக்கள் எங்கள் சகோதரர்கள். இந்துக்களை தாக்குபவர்கள் முஸ்லிமாக இருக்க முடியாது என அவர்கள் கூறினர்.
செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவுக்கு தாரை வார்த்திருந்தால், இன்னும் பதவியில் இருந்திருப்பேன் என்று வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பேசியது சர்வதேச பிரச்னையாக மாறியிருக்கிறது. வங்காள விரிகுடாவில் வெறும் 8 சதுர கிமீ பரப்பளவு கொண்ட அத்தீவு, 1947 வரை பிரிட்டிஷ் இந்தியா வசம் இருந்தது. பின்னர், கிழக்கு பாகிஸ்தான் வசம் சென்று, 1971ஆம் ஆண்டு வங்கதேசம் வசம் சென்றது.
வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் சீனாவின் மிலிட்டரி ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதனை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நினைக்கும் அமெரிக்கா, இந்தக்கடல் பகுதிகளில் ராணுவ தளத்தை நிறுவ முயற்சித்து வருகிறது. இதற்காகதான் அவர்கள் செயின்ட் மார்ட்டின் தீவை கேட்பதாக ஷேக் ஹசீனா கூறுகிறார். ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை, குமரியில் கனமழையும் பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், நாளை திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக்ஸ் வெற்றியாளர்கள் மனு பாக்கரும், நீரஜ் சோப்ராவும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் மனுவின் தந்தை ராம் கிஷன், “மனுவுக்கு இன்னும் வயது உள்ளது. அவரது திருமணம் குறித்து நாங்கள் சிந்திக்கவே இல்லை. மனுவின் தாய் நீரஜ்ஜை குடும்ப பாசத்தில் சந்தித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.