India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்லூரி விளையாட்டுகளில், ‘பிட்டு’ கேமையும் (7 ஸ்டோன்) சேர்க்க ம.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. சிறுவர்களின் பிரதான விளையாட்டுகளில் 7 ஸ்டோனும் (பிட்டு) ஒன்று. அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் 7 கற்கள் மீது ஒரு அணியினர் கல்லெறிந்து கலைப்பர். அதனை மீண்டும் அடுக்குவதற்குள் அவர்களை எதிரணியினர் அவுட்டாக்க வேண்டும். அதற்குள் 7 கற்களையும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிவிட்டால் அந்த அணி வெற்றிபெற்றதாக கருதப்படும்.
₹2000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% GST வரி விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த 54ஆவது GST கூட்டத்தில் இது தொடர்பாக மாநில அரசுகளிடம், மத்திய அரசு கருத்து கேட்டது. மாநில அரசுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்த வரி விதிப்பு பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க பகுப்பாய்வு குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Asian ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில், ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. சீனாவின் Hulunbuir நடைபெற்று வரும் AHCT 8வது தொடரில், இன்று IND-JPN மோதின. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய IND, 5 கோல்கள் அடித்தது. JPN அணி ஒரு கோல் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 5-1 என்ற கோல்கணக்கில் IND அணி JPNஐ வீழ்த்தியது. நேற்றைய ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் IND வீழ்த்தியிருந்தது.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பாரம்பரியத்தை விரும்புபவராக இருப்பினும் நவீன விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பார்ப்பதற்கு அமைதியானவராக தெரிந்தாலும், எளிதில் கோபமடைவீர்கள். அபாரமான மன உறுதியும் புத்திக்கூர்மையும் இருப்பதால், எதிரிகளை சமாளிப்பது உங்களுக்கு கைவந்த கலை என்கிறார்கள். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.
முதல்வரின் USA பயணம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி Xஇல் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வருக்கு அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வருக்கு, அங்குள்ள தமிழர்கள் மிக சிறப்பான வரவேற்பை வழங்கி வருகிறார்கள். முதல்வரும் தான் தமிழகத்தில் இருப்பது போன்று உணர்வதாக பல இடங்களில் தெரிவித்திருந்தார்.
தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் பேசிய அவர், வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். மகளிரை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது, பாதுகாப்பான இடத்தில் நிற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், போதுமான மருந்துகள் உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். தொற்று இருப்பதாக சந்தேகப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என இபிஎஸ் வேதனை தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? என சாடிய அவர், தினமும் தலைப்பு செய்தியாகும் அளவுக்கு இயல்பாக கொலைகள் நடப்பதே திமுக அரசின் 3 ஆண்டு சாதனை என விமர்சித்துள்ளார்.
கடல் நீரில், உப்பு அதிகமாக காணப்படுவதற்கு காரணம் தெரியுமா? மழை பெய்யும்போது பாறைகள் & மணல் மீது செல்லும் நீர், அவற்றில் இருக்கும் உப்பு & தாதுக்களை எடுத்துக்கொண்டு ஆறுகளில் சேர்க்கிறது. அந்த நீர் ஆறுகளில் இருந்து கடலில் கலக்கிறது. கடலில் உள்ள நீரின் அடர்த்தி குறைவு என்பதால், சூரிய வெப்பத்தால் அதன் சிறுபகுதி (நன்னீர்) ஆவியாகி மழையாகப் பொழிகிறது. தாதுக்கள் கடலிலேயே தங்கி நீரை உப்பாக வைக்கிறது.
Sorry, no posts matched your criteria.