India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா, சீனா முதலிடத்திற்கு சண்டையிட்டுக் கொண்டிருக்க, இந்தியாவோ 71வது இடத்தில் உள்ளது. 5 வெண்கலம், 1 வெள்ளி என 6 பதக்கங்களை நாம் பெற்றுள்ளோம். 140 கோடி மக்கள் தொகையையும், நமது பதக்கங்களையும் கணக்கிட்டால் 24 கோடி பேருக்கு 1 மெடல் என்ற எண்ணிக்கையில் நாம் இருக்கிறோம். ஏறத்தாழ ஒரே மக்கள் தொகை கொண்ட சீனா 91 பதக்கங்களுடன் ஒலிம்பிக்கில் 2வது இடத்தில் உள்ளது.
ஆக.22ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. செப்., அக்., மாதங்களுக்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடகா கூறிவரும் நிலையில், நடுவர் மன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் திறக்க வேண்டிய நீரை திறக்க உத்தரவிடவேண்டும் என ஆணையத்திடம் தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும், தமிழகத்திற்கு உபரி நீர்தான் வந்துள்ளதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசில் 8,326 மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப், ஹவில்தார் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தேர்வுகள் செப்.30 முதல் நவ.14 வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மற்ற விவரங்களை <
இன்று சர்வதேச இடது கை பழக்கமுடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிரிக்கெட்டிலும் லாரா, கங்குலி, யுவராஜ், கில்கிறிஸ்ட், சங்ககரா, ஜெயசூர்யா, சயீத் அன்வர், ஹெய்டன், கெயில், சந்தர்பால், வார்னர், ரெய்னா என பல சிறந்த இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என கமெண்ட் பண்ணுங்க.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) புதிய தலைவராக, S.K.பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் அவரை, தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் TNPSC தலைவராக நியமித்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். TNPSC தலைவராக 6 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார். குரூப் 1, 2, 2 ஏ, VAO போன்ற முக்கிய தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் TNPSC மூலம் நடத்தப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் அளித்திருந்தாலும், இந்தியாவுடனான நட்புறவு தொடரும் என்று வங்கதேச இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இதுகுறித்து பேசியிருக்கும் அந்நாட்டு வெளியுறவுத்துறை ஆலோசகர் தௌஹித் ஹுசைன், இந்தியாவுடனான உறவு பாதிக்காது என்றார்.
பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடுமுழுவதும் காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க நாளை (ஆக.14) கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள 10 பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் <
கொல்கத்தா அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு முதுநிலை மாணவி, சில தினங்களுக்கு முன்பு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுவதாக பரவி வரும் தகவலுக்கு மாநில போக்குவரத்துக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனி ஆணையம் அமைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு, அரசிடம் எந்த கருத்துருவும் இல்லை என்ற போக்குவரத்து கழகம், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை KKR அணி ₹24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்ததே ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்தில் விராட் கோலி பங்கேற்றால் அவர் ₹30 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என ஏலதாரர் ஹூக் எட்மீட்ஸ் தெரிவித்துள்ளார். ஸ்டார்க், கம்மின்ஸை விட கோலி மதிப்புமிக்க வீரர் என்பதால் அதிக விலைக்கு எடுக்கப்படுவார் என்றார்.
Sorry, no posts matched your criteria.