India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வழக்கில், இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு. மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், 100 கிராம் எடை கூடுதலாக உள்ளதாகக் கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்தும், வெள்ளி பதக்கம் வழங்கக் கோரியும் விளையாட்டுக்கான சமரச நீதிமன்றத்தில் வினேஷ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அமெரிக்காவில் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆகஸ்ட் 16 முதல் 25ஆம் தேதி வரை கல்வித் திருவிழாவை நடத்த அந்நாட்டு தூதரகம் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 8 பெரு நகரங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சென்னையில் ஆக.17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 80க்கும் மேற்பட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Paint 3D செயலியை நவம்பர் 4ஆம் தேதிக்கு பிறகு நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. போதிய வரவேற்பை பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த செயலியை பயன்படுத்தி வருபவர்கள் வழக்கம் போல் பயன்படுத்தலாம் எனவும், நவம்பர் 4க்கு பிறகு அது தொடர்பான அப்டேட்கள் மற்றும் டவுன்லோட்கள் மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் கிடைக்காது என்றும் கூறியுள்ளது.
மருத்துவக் கல்லூரி, நிறுவனங்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டு முறைகளை, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வார்டுகள், தங்கும் விடுதி, குடியிருப்பு பகுதிகளில் காவலர்களை பணியமர்த்தவும், பாதுகாப்பான பணிச் சூழலுக்கு ஏற்ற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘G.O.A.T’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார். நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், கீழமை நீதிமன்றம், சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தை அவர் நாடினார். அவரது மனுவை விசாரித்த, நீதிபதிகள் அபய் ஒகா, ஜார்ஜ் மஸி அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் வெளியாக உள்ளன. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆக.15ஆம் தேதி வெளியாக உள்ளது. அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திகில் படமான ‘டிமான்ட்டி காலனி 2′ வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாற்று மொழி பேசுவதில் உள்ள சிக்கல்களை பேசும் ‘ரகு தாத்தா’ படமும் ரிலீஸாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இத்தொடரை இந்தியா வென்ற நிலையில், இந்த முறை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என ஆஸி., முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஒரு போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னையிலிருந்து நாளை பிற ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. தொடர் விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வது வாடிக்கை. அந்த வகையில், ஆக.15 சுதந்திர தினம், ஆக.17, 18 வார விடுமுறை வருவதால் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, திருச்சி, மதுரை, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தாண்டு கல்லூரி படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை CTS நிறுவனம் அறிவித்துள்ளது. அதில், ஆண்டு சம்பளம் ரூ.2.52 லட்சம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் ஊழியர்களுக்கு சுமார் ரூ.21,000 மட்டுமே மாத ஊதியமாக கிடைக்கும். பொதுவாக ஐடி நிறுவனங்களில் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் ரூ.3.5 லட்சமாக இருக்கும் நிலையில் காக்னிசன்ட் புதிய சம்பளத்தை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.