India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
*மேஷம் – சாந்தமான நாள்
*ரிஷபம் – தாமதம் ஏற்படும்
*மிதுனம் – வெற்றி தேடி வரும்
*கடகம் – நட்பு வட்டம் பெருகும்
*சிம்மம் – கோபத்தை குறைக்கவும்
*கன்னி – அச்சத்தை தவிர்க்கவும்
*துலாம் – பெருமையான நாள்
*விருச்சிகம் – சிரமம் உண்டாகும்
*தனுசு – சோதனையான நாள்
*மகரம் – முயற்சிக்கேற்ற பலன் *கும்பம் – அனுகூலம் உண்டாகும் *மீனம் – புகழ் தேடி வரும்
ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனால் கைநழுவி போனதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ரஜினியிடம் ஒரு கதை சொல்லி அவருக்கு பிடித்துபோகவே சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்குவது உறுதி என்று நினைத்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பை நெல்சன் பெற்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இதனால் அப்செட்தான் என்றாலும், நெல்சனுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.
Starbucks நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த லக்ஷ்மன் நரசிம்மன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ப்ரையன் நிக்கோல் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செப். 9ல் அவர் பொறுப்பேற்பார் எனவும், அதுவரை CFO ரேச்சல், CEO-ஆக செயல்படுவார் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லக்ஷ்மன் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு ஆண்டுக்குள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீக்கத்திற்கான காரணம் கூறப்படவில்லை.
நாம் தினசரி பயன்படுத்தும் சர்க்கரை மற்றும் உப்பில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது தெரியவந்துள்ளது. டாக்ஸிக்ஸ் லிங்க் என்ற சுகாதார அமைப்பு 10 வகையான உப்புகள் மற்றும் 5 வகையான சர்க்கரையில் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 0.1மி.மீ முதல் 0.5 மி.மீ வரை பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கை முறையில் தயாராகாத சர்க்கரையில் அதிக அளவு பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழக வளிமண்டல பகுதியில் நிலவும் சுழற்சி காரணமாக, நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நாமக்கல், கரூர், சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அவசர வேலையாக வெளியில் செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
2050ல் உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, ஆண்கள்தான் அதிகம் இறக்கக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், புற்றுநோய் பாதிப்பில் 84% அதிகரிப்பும், இறப்புகளில் 93% அதிகரிப்பும் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களே அதிகம் பாதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு (OH) ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க, 4 நாள்கள் சிறப்பு முகாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தென்சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஆகஸ்ட் 20-23 வரை முகாம் நடைபெறும். இதில் பங்கேற்பவர்கள், OH தேசிய அடையாள அட்டை, ஆதார், PHOTO, Phone NO, UDID அட்டை, குடும்ப அட்டையுடன் செல்லவேண்டும். இந்த தகவலை பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு கூறவும்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பாக்., வீரர் அர்ஷத் நதீமுக்கு ₹50 லட்சம் (பாக். மதிப்பில்), சொகுசுகாரும் பரிசாக வழங்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா வைத்திருக்கும் கார்களை குறித்த தகவல்களை பகிர்ந்து இந்திய ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். Mahindra XUV 700, Range Rover, Mahindra Thar, Toyota Fortuner, Ford Mustang GT உள்ளிட்ட 5 சொகுசு கார்களை நீரஜ் வைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் புதிய கெட்டப் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த லுக்கில் அவர் இளமையாக காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் தல தோனியின் இந்த கெட்டப்பை பிரபல புகைப்படக் கலைஞர் அவினாஷ் கோவரிகர் க்ளிக் செய்துள்ளார். இந்த கெட்டப்பில் தோனி எப்படி இருக்கிறார் என கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.