news

News August 14, 2024

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?

image

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த வருடம் ஜூன் 14இல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டை கடந்து சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

News August 14, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் – 14 ▶ஆடி – 29
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:15 AM – 10:15 AM & 05:00 PM – 06:00 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 PM
▶குளிகை: 10:30 AM – 12:00 PM
▶திதி: தசமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

News August 14, 2024

எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம்: திருமாவளவன்

image

தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தலித், முதல்வராக வர முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை பற்றி விசிகவிற்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என்று கடுமையாக பேசிய அவர், சாதியை ஒழிப்போம் என்ற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே எங்களோடு இருக்கலாம் என்றார். சாதிய உள்நோக்கம் இருப்பவர்கள் தங்களை தொடர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News August 14, 2024

புஜ்ஜி பாபு தொடரில் களமிறங்கும் ஸ்ரேயாஸ்

image

இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளார். நாளை தொடங்கும் இந்த தொடரில், மும்பை அணி சார்பாக அவர் களமிறங்க உள்ளார். மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கும் நிலையில், அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து விளையாட உள்ளார். இந்த போட்டி வரும் ஆக.,27 முதல் 30 வரை கோவையில் நடக்கிறது. இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் தமிழகத்தில் நடைபெற உள்ளது.

News August 14, 2024

பூண்டு காய்கறியா OR மசாலாவா? நீதிமன்றம் தீர்ப்பு

image

பூண்டு காய்கறியா அல்லது மசாலாப் பொருளா என்ற விவாதத்துக்கு ம.பி நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2015ஆம் ஆண்டு ம.பி விவசாயிகள் பூண்டை, அம்மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியத்தில் முறையிட்டு காய்கறி வகையில் சேர்த்தனர். இதை ஏற்க மறுத்த அம்மாநில விவசாய துறை, 1972 வேளாண் சட்டத்தின் படி மசாலாப் பொருளாக அறிவித்தது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பூண்டு காய்கறிதான் என்று தீர்ப்பளித்தது.

News August 14, 2024

ரூ.300 கோடி வசூலில் சாதனை படைத்த சல்மான் கான்

image

அதிக ரூ.300 கோடி வசூல் செய்த படங்களை கொடுத்த நடிகர் என்ற சாதனையை சல்மான் கான் தன்வசம் வைத்துள்ளார். அவரின் பாரத், சுல்தான், பஜ்ரங்கி பைஜான், டைகர் ஜிந்தா ஹை, டைகர் 3, பிரேம் ரத்தன் தன் பாயோ, ரேஸ் 3 மற்றும் கிக் உள்ளிட்ட 8 படங்கள் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. ஷாருக்கான் மற்றும் அமீர்கானின் 6 படங்களும், பிரபாஸ் மற்றும் ரஜினிகாந்தின் 5 படங்களும் இந்த கிளப்பில் உள்ளது.

News August 14, 2024

ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் தான் சூப்பர்: மைக் ஹெசன்

image

2024 டி20 உலகக் கோப்பையில் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரோஹித் ஷர்மா தான் என ஆர்.சி.பி. முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியுள்ளார். ஆஸி.,க்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற ரோஹித் முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். டி20 இறுதிப் போட்டியில் கோலி, 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்ததோடு, ஆட்ட நாயகன் விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News August 14, 2024

அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கு தொடர்பு: கார்கே

image

அதானி நிறுவன முறைகேடு புகாரில் சிக்கியுள்ள செபி தலைவர் மதாபி புச் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், அதானி முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார். அதானி ஊழலில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News August 14, 2024

ஆகஸ்ட் 14 : வரலாற்றில் இன்று

image

▶1947 – பாகிஸ்தான் சுதந்திர தினம்
▶1974 – குணசித்திர நடிகர் ஆடுகளம் கிஷோர் பிறந்த தினம்
▶1982 – பிரபல தமிழ் பாடகி சுசித்ரா பிறந்த தினம்
▶1983 – பிரபல இந்திய பாடகி சுனிதி சௌஹான் பிறந்த தினம்
▶2005 – சைப்ரசில் ஏற்பட்ட விமான விபத்தில் 121 பேர் உயிரிழந்தனர்.
▶2006 – இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறார்கள் படுகாயமடைந்தனர்.

News August 14, 2024

ஆக.16இல் விண்ணில் பாயும் SSLV-D3 ராக்கெட்

image

எஸ்.எஸ்.எல்.வி. டி-3, ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்த இ.ஒ.எஸ்-08 செயற்கைக் கோள் திட்டம் ஆக.16க்கு ஒத்திவைக்கப்பட்டது. புவி கண்காணிப்பு பணிகளுக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 9:17 மணிக்கு இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் புவியிலிருந்து 475 கி.மீ தூரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.

error: Content is protected !!