India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அலுவலர் பணிக்கான அறிவிப்பை INDIAN BANK வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள 300 பணி இடங்களில் தமிழகம், புதுச்சேரியில் 160 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தேர்வாகும் நபர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன், தமிழகத்திற்குள் மட்டுமே பணியமர்த்தப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.2, கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி, கூடுதல் விவரங்களுக்கு <
தமிழ்நாடு பிரச்னைகள் குறித்து பாஜக அரசு செவிசாய்த்து கேட்பதே இல்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். மதுரை எய்ம்ஸ், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை பற்றி அதனிடம் பலமுறை வலியுறுத்தியும் அதை சரிசெய்ய அக்கட்சி மறுப்பதாக விமர்சித்த அவர், அதிமுகவை உடைக்க வேண்டும் என்பதிலேயே பாஜக கவனம் செலுத்தியது என்றார். இதனாலேயே பாஜக கூட்டணியை முறித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தைத் தாக்குப்பிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் 1947 ஆக. 15இல் சுதந்திரம் அளித்தனர். அதற்கு முன்பு, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மட்டும் தனி நாடாக பிரித்தனர். அந்த பகுதிக்கு 1947 ஆக. 14இல் சுதந்திரம் அளித்தனர். இதுவே பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டில், தற்போதைய பாகிஸ்தான், வங்கதேசப் பகுதிகள் அளிக்கப்பட்டன.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென MET தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், நெல்லை, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக MET கூறியுள்ளது. நாளை 11 மாவட்டங்கள், நாளை மறுநாள் 20 மாவட்டங்கள், 17ஆம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
நாடு முழுவதும் நாளை வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்டவற்றுக்கு நாளை விடுமுறையாகும். எனினும் வங்கிகளின் Online பரிவர்த்தனை, ATM சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவை வழக்கம் போல் செயல்படும்.
ரூ.30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்க விடப்பட்ட டெண்டரை இந்தியன் ரயில்வே ரத்து செய்தது. வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ஒப்புக்கொண்டிருந்த அல்ஸ்தம் இந்தியா நிறுவனம், ரயில் விலையை அதிகமாக குறிப்பிட்டதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில்வே ஒரு ரயிலுக்கு ரூ.140 கோடி விலை நிர்ணயித்திருந்தது. ஆனால், அல்ஸ்தம் நிறுவனம் ஒரு ரயில் விலையை ரூ.150.9 கோடியாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் புதிய தலைவராக பெண் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பாஜக தலைவராக இருக்கும் ஜே.பி.நட்டா அமைச்சரான நிலையில், புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாள்களாக இருந்து வந்தது. இந்நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டில் இது தொடர்பாக 5 மணி நேரம், RSS தலைவர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பெண் ஒருவரை தலைவராக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஜம்மு & காஷ்மீர் தேர்தல் தொடர்பான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. செப்., 30க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் நேரில் ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு 4 முதல் 5 கட்டங்களாக நடைபெறும் என்றும், தேர்தல் தேதி சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 2014இல் கடைசியாக அங்கு தேர்தல் நடைபெற்றது.
நவக்கிரக பரிகார திருத்தலங்களில் திருமங்கலக்குடி ஆலயம் சிறப்பு வாய்ந்தது. நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் இந்த கோயிலாகும். இத்தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலவராக பிராணவரதேஸ்வரரும், அம்பாளாக மங்கள நாயகியும் அருள் புரிகிறார்கள். திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் சிலாகித்து பாடப்பட்டிருக்கும் புண்ணிய தலமாக இந்த ஆலயம் உள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் தொடரில் இருந்து விலகிய நிலையில், கேப்டனாக ஆலி போப் செயல்பட உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கை அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.